ஸ்டாலின்: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்

ஸ்டாலின்: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்

1 mins read

சென்னை: தமி­ழர்­கள் தங்­கள் குழந்­தை­க­ளுக்கு அழ­கான தமிழ்ப் பெயர்­க­ளைச் சூட்ட வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற திரு­மண விழா­வில் பேசிய அவர், சீர்­தி­ருத்த, சுய­ம­ரி­யாதை உணர்­வோடு நடை­பெ­றக்­கூ­டிய திரு­ம­ணங்­களில் தாம் தொடர்ந்து பங்­கேற்று மண­மக்­களை வாழ்த்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இன்று நடந்­தி­ருப்­பது ஒரு தமிழ்த் திரு­ம­ணம் என்­றும் சொல்­ல­லாம். தமி­ழுக்­குப் பெருமை சேர்க்­கக்­கூ­டிய வகை­யில் செம்­மொழி என்­கிற அங்­கீ­கா­ரத்­தை­யும் பெற்­றுத்­தந்­தார் காலஞ்­சென்ற முதல்­வர் கரு­ணா­நிதி.

"இன்­றைய கால­கட்­டத்­தில் எங்கு பார்த்­தா­லும் அனை­வ­ரா­லும் ஏற்­றுக்கொள்­ளக்­கூ­டிய சுய­ம­ரி­யாதை, சீர்­தி­ருத்த திரு­ம­ணங்­கள் நடை­பெற்­றுக்கொண்­டி­ருக்­கின்­றன.

"அனை­வ­ருக்­கும் அன்­பான வேண்­டு­கோள். உங்­க­ளுக்­குப் பிறக்­கின்ற குழந்­தை­க­ளுக்கு அழ­கான தமிழ்ப் பெயர்­க­ளைச் சூட்­டுங்­கள்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.