கோவையில் கோயில் இடிப்பு

கோவையில் கோயில் இடிப்பு

1 mins read
6b8a44dc-62f2-487f-954d-7854eb505873
கோயில் இடிக்­கப்­பட்­ட­தைக் கேள்­வி­யுற்ற இந்து முன்­ன­ணி­யி­னர் அங்கு வந்து எதிர்ப்பு தெரி­வித்­த­னர். படம்: தினமலர் -

கோவை: கோவை ரேஸ்­கோர்ஸ் பகுதியில் பல ஆண்­டு­க­ளாக செயல்­பட்ட சிவ­சக்தி சாய் கோயிலை போக்கு­வ­ரத்­துக்கு இடை­யூ­றாக இருப்­ப­தா­கக் கூறி கோவை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் நேற்று இடித்து விட்­ட­னர்.

அது மட்­டு­மல்­லா­மல் அங்கு இருந்த 25 ஆண்டு பழ­மை­யான சந்­தன மரத்­தை­யும் அவர்­கள் எடுத்­துச் சென்­று­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கோயில் இடிக்­கப்­பட்­ட­தைக் கேள்­வி­யுற்ற இந்து முன்­ன­ணி­யி­னர் அங்கு வந்து எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

அப்­போது பேசிய மாநில நிர்­வா­கக் குழு உறுப்­பி­ன­ரான சதீஷ், "இந்து கோயில்கள் மட்­டுமே குறி வைத்துத் தாக்­கப்­ப­டு­கிறது. தனி­யார் பள்­ளி­யின் முன்­வா­சல் மாந­க­ராட்சி பகு­தி­யில் உள்­ளது. அதை ஏன் இடிக்­க­வில்லை," என்று கேட்­டார்.