ஆம்பூர்: ஆம்பூரில் இளம்பெண்ணுக்கு அவசர அவசரமாக தாலி கட்டிய இளையருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிழமை இரவு 9.00 மணியளவில் ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்த காதல் ஜோடி அங்குள்ள கழி வறையின் பின்புறமாகச் சென்றனர். அப்போது யாரும் இல்லாததை அறிந்து இளையர் பெண்ணின் கழுத்தில் அவசர அவசரமாக தாலி கட்டினார்.
இது, காணொளியாக சமூக ஊடங்களில் பரவி வருகிறது. இதையறிந்த ஆம்பூர் நகரக் காவல்துறையினர் தாலி கட்டிய இளையரையும் பெண்ணையும் தீவிரமாகத் தேடி வருகின்ற னர்.


