12 அரசுத்துறை அலுவலகங்களில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் பறிமுதல்

2 mins read
fb004fd5-811a-4168-9fa4-baf5adc8d33d
சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் மேற்­கொண்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது லட்­சக்­கணக்­கில் ரொக்­கப் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. படம்: பிக்ஸாபே -

60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் மேற்­கொண்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது லட்­சக்­கணக்­கில் ரொக்­கப் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

மாநி­லம் முழு­வ­தும் மொத்­தம் 60 இடங்­களில், 12 அர­சுத்­துறை அலு­வ­ல­கங்­களில் இந்­தச் சோதனை நடத்­தப்­பட்­டது.

அரசு அலு­வ­ல­கங்­களில் பல்­வேறு ஆவ­ணங்­கள், பீரோக்­கள், கோப்­பு­கள் வைக்­கப்­ப­டுள்ள அறை­களில் லஞ்­ச­மா­கப் பெறப்­பட்ட ரொக்­கப்­ப­ணம் கட்­டுக்­கட்டா­க மறைத்து வைக்­கப்­பட்டு இ­ருந்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பெரும்­பா­லும் சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கங்­க­ளைக் குறி­வைத்து அதி­கா­ரி­கள் சோதனை மேற்­கொண்­டுள்­ள­னர்.

சேலம், ஈரோடு மாவட்­டங்­களில் போக்­கு­வ­ரத்­துத் துறை சார்ந்த இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது.

ஈரோடு மாவட்­டம் பண்­ணா­ரி­யில் போக்­கு­வ­ரத்­துத் துறை சோத­னைச்­சா­வ­டி­யி­லும், கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஓசூ­ரில் உள்ள ஜூஜூ­வாடி சோத­னைச் சாவ­டி­யி­லும் லஞ்ச ஒழிப்­புக் காவ­ல்­து­றை­யி­னர் சோதனை நடத்­தி­னர்.

கட­லூர் மாந­க­ராட்சி அலு­வ­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் மதி­யம்் சுமார் மூன்று மணி முதல் இர­வு­வரை சோதனை நீடித்­தது என்­றும், வீடு கட்­டு­வ­தற்கு வரை­ப­டம் தயார் செய்து மாந­க­ராட்­சி­யில் அனு­மதி பெற்­று­த் த­ரும் நான்கு தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­லும் லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் குவிந்து சோதனை நடத்­தி­னர்.

செய்­யாறு சார் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் வெளிப்­புறக் கதவைப் பூட்டி விட்டு நடத்­தப்­பட்ட சோத­னை­யில் கணக்­கில் வராத பணம் ரூ.2.50 லட்­சம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

தூத்­துக்­குடி மாவட்ட நகர் ஊர­மைப்பு அலு­வ­ல­கத்­தில் பொதுமக்­களில் ஒரு­வர் லஞ்­சம் கொடுப்­ப­தற்­காக தங்க நாண­யத்­து­டன் வந்­தி­ருப்­பதை அறிந்த அதி­கா­ரி­கள் அதைப் பறி­மு­தல் செய்­த­னர். மது­ரை­யில் சில அரசு அதி­கா­ரி­க­ளின் வீடு­க­ளி­லும் சோதனை நடத்­தப்­பட்­டது.

மாநி­லம் முழு­வ­தும் சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கங்­களில் பணி­யாற்­றும் எழுத்­தர்­கள், இடைத்­த­ர­கர்­க­ளி­டம் இருந்­து­தான் அதிக அள­வி­லான பணம் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

சார் பதி­வா­ளர் அலு­வ­ல­கங்­களில் லஞ்­சம் பெறு­வது அதி­க­ரித்­து­விட்­ட­தாக பல்­வேறு தரப்­பி­ன­ரும் புகார்­கள் எழுப்­பி­யதை அடுத்து இந்­தச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இதே­போல் போக்­கு­வ­ரத்து உள்ளிட்ட பன்­னி­ரெண்டு அர­சுத் துறை­களில் லஞ்­சம் தலை­வி­ரித்­தா­டு­வ­தாக சமூக ஊட­கங்­களில் பலர் விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

பணப்­பு­ழக்­கம் அதி­க­மாக உள்ள வரு­வாய்த்­துறை, பத்­தி­ரப்­ப­தி­வுத் துறை, போக்­கு­வ­ரத்துத் துறை (ஆர்­டிஓ அலு­வ­ல­கம்), உள்­ளாட்­சித்­துறை, மின்­சார வாரி­யம் உள்­ளிட்ட துறை­க­ளின் அலு­வ­ல­கங்­களைக் குறி­வைத்து அதி­ரடி சோதனை நடந்­துள்­ளது.

இந்த அலு­வ­ல­கங்­களில் அன்­றா­டம் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கப் பெறப்­படும் லஞ்­சத் தொகை மதிய உணவு இடை­வேளைக்­குப் பிறகே கைமாறும் என்­றும் கூறப்­ப­டு­வ­தால், அந்­தச் சம­யத்­தில் சோதனை மேற்­கொண்­ட­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

நேற்று முன்­தி­னம் நடந்த இந்த அதிரடிச் சோதனை நட­வ­டிக்­கை­யில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.