பற்றி எரியும் கொடைக்கானல் காட்டுத் தீ; பெரும் புகை மண்டலத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 mins read
ffd59a13-df40-49ee-aac5-8063130aa9ea
-

திண்­டுக்­கல்: கொடைக்­கா­னல் காட்­டுப் பகு­தி­யில் மூண்­டுள்ள காட்­டுத் தீ கார­ண­மாக அங்கு பெரும் புகை­மூட்­டம் காணப்­ப­டு­கிறது. இத­னால் அப்­ப­குதி மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

காட்­டுத் தீயை அணைப்­ப­தற்கு காட்­டு­வ­ளத்­து­றை­யி­னர் போராடி வரு­வ­தா­க­வும் பொது­மக்­கள் பொறுமை காக்க வேண்­டும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கோடை வெயி­லின் தாக்­கம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. பல்­வேறு பகு­தி­களில் அதிக வெப்ப நிலை பதி­வாகி வரும் நிலை­யில், மாநி­லத்­தில் உள்ள சில காட்­டுப் பகு­தி­களில் வெயி­லின் தாக்­கத்­தால் சருகு இலை­களில் தீப்­பி­டித்து, அது காட்­டுத் தீயாக மாறி வரு­கிறது.

இந்­நி­லை­யில், திண்­டுக்­கல் மாவட்­டம் கொடைக்­கா­னல் மலைப்­ப­கு­தி­யில் மூண்­டுள்ள காட்­டுத் தீ கார­ண­மாக காட்டுக்கு அருகே உள்ள விவ­சாய நிலங்­களும் கருகி வரு­கின்­றன.

செண்­ப­க­னூர் காட்­டுப் பகு­தி­யில் மூண்­டுள்ள தீயால் அங்­குள்ள அரிய வகை மரங்­கள், மூலி­கைச் செடி­களும் தீயின் கோரக்­க­ரங்­களில் சிக்கி நாச­மா­கி­விட்­ட­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், தீயின் கடுமை தாங்­கா­மல் காட்டு ­வி­லங்­கு­கள் இடம் மாறும் அபா­ய­மும் நில­வு­வ­தாக அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

காட்­டுத்­தீயைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில் நவீன முறை­யை­யும் தொழில்­நுட்­பத்­தை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும் என இயற்கை ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இதற்­கி­டையே காட்­டுத் தீயால் கொடைக்­கா­னல் பகு­தியை புகை சூழ்ந்­துள்­ளது. பெரும் புகை மண்­ட­லம் கார­ண­மாக அ|ங்கு பொதுமக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­க­கப்­பட்­டுள்­ளது என்­றும் பலர் வீடு­க­ளுக்­குள் முடங்­கிக் கிடப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கொடைக்­கா­னல் செண்­ப­க­னூர் காட்­டுப் பகு­தி­யில் கடந்த இரு தினங்­க­ளாக பல ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் காட்­டுத் தீ எரிந்து வரு­கிறது.

பொதுமக்­களில் சிலர் மூச்சு விடு­வ­தில் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும், குழந்­தை­க­ளுக்­கும் சிர­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ள­னர். தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வரும் நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.