'கூகல் பே' மூலம் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது வழக்கு

'கூகல் பே' மூலம் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது வழக்கு

1 mins read
9f6e5336-493b-4f17-800b-311d07d7b108
நாமக்­கல்: தமி­ழ­கத்­தில் 'கூகல் பே' கைப்­பேசி செயலி மூலம் லஞ்­சம் வாங்­கும் போக்கு அதி­க­ரித்து வரு­கிறது. படம்: இணையம் -

நாமக்­கல்: தமி­ழ­கத்­தில் 'கூகல் பே' கைப்­பேசி செயலி மூலம் லஞ்­சம் வாங்­கும் போக்கு அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­தச் செயலி மூலம் ரூ.35 ஆயி­ரம் லஞ்­சம் பெற்ற குற்­றச்­சாட்­டின் பேரில் நாமக்­கல் மாவட்ட சுகா­தா­ரப் பிரிவு துணை இயக்­கு­நர் பிர­பா­க­ரன் உள்­ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்­கல் மாவட்­டத்­தில் பணி­பு­ரிந்த 76 ஒப்­பந்த தாதி­யர்­கள் பல்­வேறு இடங்­க­ளுக்கு இட­மா­று­தல் உத்­த­ரவு பெற்­ற­னர்.

எனி­னும் தற்­போது பணி­பு­ரி­யும் இடத்­தில் இருந்து அவர்­களை விடு­விக்க துணை இயக்­கு­நர் பிர­பா­க­ர­னும் அவ­ரது அலு­வ­ல­கத்­தில் உடன் பணி­யாற்­றும் சுகா­தார ஆய்­வா­ளர் முத்­து­மணி ஆகிய இரு­வ­ரும் ரூ.35 ஆயி­ரம் வரை லஞ்­சம் பெற்­றுள்­ள­னர். மேலும், முன்­னாள் அதி­காரி ஒரு­வ­ரும் லஞ்­சம் பெற உத­வி­யுள்­ளார்.

மூவர் கூட்­டணி லஞ்­சப் பணத்தை 'கூகல் பே' சேவை மூலம் பெற்­றது தெரி­ய­வந்­துள்­ளது. இரு தவ­ணை­க­ளாக இந்த லஞ்­சம் அளிக்­கப்­பட்­ட­தாக தாதி­யர்­கள் சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

தங்­க­ளுக்கு லஞ்­சம் கொடுத்த தாதி­யரை மட்­டும் அரசு உத்­த­ர­வுக்­கேற்ப உட­ன­டி­யாக பணி­யில் இருந்து விடு­வித்து, இட­மா­று­தல் உத்­த­ரவை நிறை­வேற்­றிய பிர­பா­க­ரன், மற்ற தாதி­யரை பணி­யில் இருந்து விடு­விக்­கா­மல் இழுத்­த­டித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் பாதிக்­கப்­பட்ட தாதி­யர் சிலர் நாமக்­கல் மாவட்ட லஞ்ச ஒழிப்­புப் பிரி­வில் புகார் அளித்­த­னர்.

அதன் பேரில் நட­வ­டிக்கை மேற்­கொண்ட லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் பிர­பா­க­ரன் உள்­ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.