மதுரை மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

மதுரை மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

1 mins read
8192cab3-c43b-41f3-bbf5-f7dbc0776353
மதுரை: சளிக்காய்ச்­சல் (இன்­பு­ளு­யன்சா) பாதிப்­பால் மதுரை அரசு மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்­சைக்­காக வரும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. படம்: இணையம் -

மதுரை: சளிக்காய்ச்­சல் (இன்­பு­ளு­யன்சா) பாதிப்­பால் மதுரை அரசு மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்­சைக்­காக வரும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

நாள்­தோ­றும் மருத்­து­வ­ம­னை­யின் வெளி நோயா­ளி­கள், காய்ச்­சல் பிரி­வுக்கு 300 பேர் வரை வந்து செல்­வ­தா­க­வும் வார இறுதி நாள்­களில் கூடு­த­லாக 70 பேர் வரை வரு­வ­தா­க­வும் மருத்­து­வ­மனை நிர்­வா­கம் கூறி­யுள்­ளது.

நான்கு நாள்­க­ளுக்­கும் மேலாக நீடிக்­கும் காய்ச்­சல், சளி, மூச்சு விடு­வ­தில் சிர­மம் ஆகிய அறி­குறி­கள் இருந்­தால் மட்­டுமே இன்­பு­ளு­யன்சா பாதிப்­பைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும் என மருத்­து­வ­மனை நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, அங்­குள்ள குழந்­தை­கள் சிகிச்­சைப் பிரி­வுக்கு வரும் குழந்­தை­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது. நாள்­தோ­றும் 25 குழந்­தை­கள் காய்ச்­சல் கார­ண­மாக சிகிச்­சைக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் பரவி வரும் புதிய கிரு­மித்­தொற்று காய்ச்­சல் கார­ண­மாக பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விடப்­ப­டாது என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார்.

"இது­போன்ற தக­வல்­க­ளைப் பரப்பி மக்­க­ளைப் பதற்­றப்­ப­டுத்­தும் சூழலை உரு­வாக்க வேண்­டாம் என்­றும் பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டை­ய­வில்லை என்­றும் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பின்­போது அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெளி­வு­ப­டுத்­தி­னார்.