இரவில் நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி விடிந்ததும் சேர்க்கப்பட்டார்

இரவில் நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி விடிந்ததும் சேர்க்கப்பட்டார்

1 mins read

தூத்­துக்­குடி: கூட்­டணி தர்­மத்தை மீறி பாஜக நிர்­வா­கி­களை அதி­மு­க­வில் இணைப்­ப­தா­கக் கூறி தூத்­துக்­குடி மாவட்­டம் கோவில்­பட்டி இனாம் மணி­யாச்­சி­யில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட பாஜக இளை­ஞ­ர­ணித் தலை­வர் தினேஷ் ரோடி தலை­மை­யி­லான நிர்­வா­கி­கள், எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் உரு­வப்­ப­டத்தை எரித்­த­னர். இதற்கு அதி­மு­க­வி­னர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­த­னர். அத­னைத் தொடர்ந்து, தினேஷ் ரோடியை கட்­சி­யி­லி­ருந்து ஆறு மாதம் இடை­நீக்­கம் செய்து தூத்­துக்­குடி வடக்கு மாவட்ட பாஜக தலை­வர் வெங்­க­டே­சன் புதன்­

கி­ழமை இரவு உத்­த­ர­விட்­டார். இந்­நி­லை­யில் தினேஷ் ரோடியை மீண்­டும் கட்­சி­யில் சேர்த்து பாஜக மாநில பொதுச்­செ­ய­லா­ளர் பொன் பால­க­ண­பதி நேற்­றுக் காலை உத்­த­ர­விட்­டார். நீக்­கப்­பட்­ட­வர் 12 மணி நேரத்­திற்­குள் மீண்­டும் சேர்க்­கப்­பட்­ட­தால் பாஜ­க­வி­னர் அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.