தமிழகம் முழுவதும் சாலையில் பாலைக் கொட்டி ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் சாலையில் பாலைக் கொட்டி ஆர்ப்பாட்டம்

1 mins read
aebe97b1-944e-4378-a5f4-aede8fc70a88
-
Google News Preferred Icon

ஈரோடு: பால் கொள்­மு­தல் விலையை அதி­க­ரிப்­பது உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி பால் உற்­பத்தி­யா­ளர்­கள் கடந்த இரு நாள்­க­ளாக மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர். பல இடங்­களில் பால் வியா­பா­ரி­கள் பாலை சாலை­யில் கொட்டி தங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­த­னர்.

ஈரோட்­டில் பாலை சாலை­யில் கொட்­டி­ய­து­டன்ம், கறவை மாடு­க­ளு­டன் பால் வியா­பா­ரி­கள் சாலை மறி­ய­லி­லும் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது பால் கொள்­மு­தல் விலையை உயர்த்­தித் தர வேண்­டும், கால்­ந­டைத் தீவ­னங்­களை 50% மானிய விலை­யில் தர வேண்­டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய பால் உற்­பத்­தி­யா­ளர் சங்­கத்­தின் ஈரோடு மாவட்­டத் தலை­வர் ராம­சாமி, மாநி­லம் முழு­வ­தும் ஆவின் நிறு­வ­னத்­துக்கு பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் தரக்­கூ­டிய பால் அளவு படிப்­ப­டி­யா­கக் குறை­யும் என்­றும் விரை­வில் பால் விநியோ­கம் முழு­மை­யாக நிறுத்­தப்­படும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

இந்­தப் போராட்­டம் கார­ண­மாக பொது­மக்­க­ளுக்­கான பால் விநி­யோ­கத்­தில் தடை ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் நிலவி வரு­கிறது.