தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'அவள்' திட்டம்

2 mins read
2b2cd02a-7622-4b4c-a8c4-72847257b96b
-

தமிழக காவல்துறை பெண்கள் பிரிவின் பொன்விழா நிகழ்வில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் பெண்­களின் பாது­காப்பை உறுதி செய்­யும் வகை­யில் 'அவள்' என்ற பெய­ரில் புதிய திட்­டத்தை அறி­வித்­துள்­ளது அரசு.

தமி­ழக காவல்­து­றை­யில் பெண் காவ­லர்­கள் பிரிவு தொடங்­கப்­பட்­ட­தன் பொன் விழா நிகழ்­வில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் இத்­திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

பெண்­கள், சிறார்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதற்­கான 'அவள்' திட்­டம் ரூ.8.5 கோடி செல­வில் மேற்­கொள்­ளப்­படும் என்­றார் அவர். பெண்களுக் காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.

இரு­பது பேரு­டன் தொடங்­கப்­பட்ட பெண் காவ­லர் பிரி­வில் தற்­போது 35 ஆயி­ரம் பெண் காவ­லர்­கள் பணி­யாற்றி வரு­வ­தா­க அவர் கூறினார். பெண் காவ­லர்­கள் நாட்­டைக் காத்­துக்கொண்டு இருக்­கும் காவல் அரண்­கள் என்று குறிப்­பிட்ட அவர், கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் உயி­ரும் உடைமை­யும் பெண் காவ­லர்­களை நம்பி ஒப்­ப­டைக்­கப்­பட்டு இருக்­கிறது என்­றார்.

முதல்­வர் என்ற வகை­யில் தமக்­கான பாது­காப்­புப் படை­யிலும் பெண் காவ­லர்­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்டி­னார்.

"தமி­ழ­கக் காவல் துறை­யைப் பொறுத்­த­வ­ரை­யில், இணைய தொழில்­நுட்­பத்தை 70 விழுக்­காடு பெண்­கள்­தான் செயல்­ப­டுத்­து­கிறார்­கள்.

"காவல் தொழில்­நுட்­பப் பிரி­வில் 140 பெண் உதவி ஆய்­வா­ளர்­கள் பணி­பு­ரி­கின்­ற­னர். விரல் ரேகைப் பிரி­வில் புதிய தொழில்­நுட்­பத்­தைச் செயல்­ப­டுத்­தும் வித­மாக 72 பெண் அதி­கா­ரி­கள் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்," என்று பெரு­மி­தம் தெரி­வித்த முதல்­வர் ஸ்டா­லின் சில முக்­கிய அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார்.

பெண் காவ­லர்­க­ளுக்­கான அன்­றாட காவல் வருகை அணி­வகுப்பு இனி காலை ஏழு மணி என்­ப­தற்­குப் பதி­லாக, எட்டு மணி என்று மாற்­றி­ய­மைக்­கப்­படும் என்­றும் பெரு­ந­க­ரங்­களில் பெண் காவ­லர்­க­ளுக்­கான தங்­கும் விடுதி­கள் விரை­வில் அமைக்­கப்­படும் என்றும் முதல்­வர் தெரி­வித்­தார்.

அனைத்­துக் காவல் நிலை­யங்­க­ளி­லும் பெண் காவ­லர்­க­ளுக்­கென கழி­வறை வச­தி­யு­டன் தனி ஓய்­வறை கட்­டித் தரப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், மிக விரை­வில் தேவை­யான அனைத்து இடங்­களி­லும் பெண் காவ­லர்­க­ளின் வச­திக்­காக 'காவல் குழந்­தை­கள் காப்­ப­கம்' அமைக்­கப்­படும் என்­றார்.

"பெண் காவலர்களைச் சிறப்பிக்கும் வகையில் 'கலைஞர் காவல் பணி விருதும் கோப்பையும்' ஆண்டுதோறும் வழங்கப்படும்.

"பெண் காவலர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.