வடமாநிலத் தொழிலாளர்களின் குடிசைகளுக்குத் தீ வைப்பு

வடமாநிலத் தொழிலாளர்களின் குடிசைகளுக்குத் தீ வைப்பு

1 mins read

நாமக்­கல்: பர­மத்­தி­வே­லூர் பகுதி­யில் வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் தங்­கி­யி­ருந்த குடி­சை­களுக்கு அடை­யா­ளம் தெரி­யாத சிலர் தீ வைத்த சம்­ப­வம் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

எட்டு குடி­சை­கள் முற்­றி­லு­மாக தீக்­கி­ரை­யான நிலை­யில், இச்­சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்த நாமக்­கல் மாவட்ட ஆட்­சி­யர் ஸ்ரேயா சிங் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

பர­மத்­தி­வே­லூர் பகு­தி­யில் உள்ள ஆலை­களில் ஏரா­ள­மான வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இரண்டு ஆலை­களில் பணி­யாற்­றும் தொழி­லா­ளர்­கள் எட்டு குடி­சை­களில் தங்கி இருந்­த­னர். அவர்­கள் ஆலைக்­குச் சென்­றி­ருந்த வேளை­யில் குடி­சை­க­ளுக்குத் தீ வைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் உயிர்ச்­சே­தம் ஏதும் இல்லை.

விவ­ரம் அறிந்த மாவட்ட ஆட்­சி­யர் ஸ்ரேயா சிங்­கும் மாவட்ட கண்­கா­ணிப்­பா­ளர் கலைச்­செல்­வ­னும் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று தொழி­லா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னர்.

அவர்­க­ளின் பாது­காப்பு உறுதி செய்­யப்­படும் என்று இரு­வ­ரும் உத்­த­ர­வா­தம் அளித்­த­னர். பதற்­றத்­தைக் குறைக்க ஏது­வாக அப்­ப­கு­தி­யில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட காவ­லர்­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.