நாகை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதையடுத்து 12 பேரும் நாடு திரும்புகின்றனர்.
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைதாகினர்.
இதையடுத்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது, மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற எச்ச ரிக்கையுடன் அனைவரையும் விடுவித்தார் நீதிபதி.
எனினும், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை அரசு உடைமை யாக்கி அவர் உத்தரவிட்டார்.

