நீதிபதி: தேர்தலைத் தொடரலாம்; முடிவுகளை அறிவிக்கமுடியாது

நீதிபதி: தேர்தலைத் தொடரலாம்; முடிவுகளை அறிவிக்கமுடியாது

2 mins read
4178067d-dd54-482d-9469-6de3c9c62264
-
multi-img1 of 2

பொதுச்­செ­ய­லா­ளர் பத­விக்­குத் தேர்­தல் நடத்­தத் தடை விதிக்கக் கோரிய மனு விசாரணை

சென்னை: இரட்­டைத் தலை­மை கொள்கையை நீக்கிவிட்டு ஒற்­றைத் தலை­மையை உரு­வாக்­கிக் கொண்­டு­வ­ரப்­பட்ட, தீர்­மா­னத்தை ரத்து செய்­யக்கோரி உரி­மை­யியல் வழக்கு நிலு­வை­யில் உள்ள நிலை­யில், பொதுச்­செ­ய­லா­ளர் பத­விக்­குத் தேர்­தல் நடத்­துவதற்குத் தடை விதிக்க வேண்­டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்­பி­னர் நீதி­மன்­றத்­தில் மனுதாக்­கல் செய்திருந்தனர்.

மார்ச் 26ஆம் தேதி தேர்­தல் நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இந்த வழக்கை அவ­சர வழக்­காக விசா­ரிக்க வேண்­டும் என்று ஓபி­எஸ் தரப்­பில் முறை­யீடு செய்­யப்­பட்­டது. அதை ஏற்­றுக்கொண்ட பொறுப்புத் தலைமை நீதி­பதி டி ராஜா, இதை அவ­சர வழக்­காக விசா­ரிக்க அனு­மதி அளித்­துள்­ளார். அதன்­படி, இந்த மனுவை விடு­முறை நாளான மார்ச் 19, ஞாயிற்­றுக்­கி­ழமை நீதி­பதி கே.கும­ரேஷ் பாபு தொடங்கி வைத்­தார்.

நேற்று நடந்த வழக்கு விசாரணையில், "உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்­பின்படியே வழக்கை தொடர்ந்­துள்­ளோம். நிரந்­தர பொதுச்­செ­ய­லா­ளர் ஜெய­ல­லி­தா­தான் என்று அறி­வித்­து­விட்டு இப்­போது தேர்­தலை அறி­வித்­துள்­ள­னர்.

"அதி­மு­க­வில் எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா வகித்த பத­வி­களை வேறு யாரும் வகிக்க முடி­யாது. இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ளர் என யாரை­யும் தேர்­தல் ஆணை­யம் இது­வரை அங்­கீக­ரிக்­க­வில்லை," என்று ஓபி­எஸ் தரப்பு கூறி­யுள்­ளது.

ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பின் 40 நிமிட வாதம் நிறை­வு­பெற்­றதை அடுத்து பழ­னி­சாமி வாதம் தொடங்­கி­யது. எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பில் மூத்த வழக்­க­றி­ஞர் சி.எஸ். வைத்­தி­ய­நா­தன் வாதத்தை தொடங்­கி­னார். "ஒன்­றரை கோடி தொண்­டர்­களில் ஒரு விழுக்­காடு ஆத­ரவு கூட ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு இல்லை. பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­தல் 1.5 கோடி உறுப்­பி­னர்­கள் மூலமே நடத்­தப்­ப­டு­கிறது என்று வாதா­டி­னார்.

மேலும், ஓபி­எஸ் தரப்பு வழக்­க­றி­ஞர் வாதி­டு­கை­யில், "சனிக்­கிழமை வேட்பு மனுத் தாக்­கல் தொடங்கி ஞாயிறு வேட்பு மனு தாக்­கல் நிறைவு என அறி­வித்­து­விட்­ட­னர்.

"பத்­தாண்­டு­கள் உறுப்­பி­னர், ஐந்­தாண்­டு­கள் தலைமைக் கழக நிர்­வாகி என்ற விதி­யில் திருத்­தம் செய்­துள்­ள­னர்.

"அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் பத­விக்­கான தேர்­த­லில் சாதா­ரண தொண்­டன் போட்­டி­யிட முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர். தேர்­தலை நடத்த அனு­ம­தித்­தால் தேர்தல் முடிவாகும் அன்று மாலையே எடப்­பாடி பழ­னி­சாமியை பொதுச்­செ­ய­ல­ராக அறி­வித்­து­வி­டு­வார்­கள். எனவே, இந்தத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்­டும்," என்று வாதிட்­டார்.

இந்­நி­லை­யில், இது­கு­றித்து நீதி­பதி கும­ரேஷ் பாபு, "பொதுக்­குழு வழக்கு நிலு­வை­யில் உள்­ள­போது பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­தல் அறி­விக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன," என்று பழனிசாமி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

"அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­தலை நிறுத்த விரும்­ப­வில்லை. அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் பத­விக்­கான தேர்­தல் நடை­முறை­க­ளைத் தொட­ர­லாம். ஆனால், தேர்­தல் முடிவை அறி­விக்­கக்­கூடாது என்று நீதி­பதி உத்­த­ரவு அளித்­துள்­ளார்.

ஏப்­ரல் 11ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்ட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ரான பழைய வழக்கை மார்ச் 22ஆம் தேதியே விசா­ரிக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்க உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ரவு அளித்­துள்­ளது.