தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உரிமைத்தொகை

4 mins read
98de17a8-0018-47bf-9f5f-9bd93ab9ad27
-

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்; பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட் டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யின் நிதி­நிலை அறிக்­கைக்­கான கூட்­டத்­தொ­டர் நேற்று காலை தொடங்­கி­யது. இதை­ய­டுத்து தமிழக அர­சின் 2023-24ஆம் ஆண்­டுக்­கான நிதிநிலை அறிக்­கையை நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தாக்­கல் செய்­தார்.

அப்­போது, வரு­வாய் பற்­றாக்­கு­றையை அரசு கணி­ச­மா­கக் குறைத்­துள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், ரூ.62 ஆயி­ரம் கோடி­யாக இருந்த வரு­வாய் பற்­றாக்குறையை, ரூ.30 ஆயி­ரம் கோடி­யாக குறைத்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­னார்.

அரசு நிர்­ண­யித்திருந்த இலக்கு­களில் குறிப்­பிடத்தக்க முன்­னேற்­றம் அடைந்­துள்­ள­தா­க­வும் அவர் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.

மேலும், கல்­வித்­து­றைக்கு ரூ.47,000 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. சென்­னையைப் போல், கோவை, மது­ரை­யில் மெட்ரோ ரயில் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த நிதி­நிலை அறிக்கை­யில் உரிய நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியாகராஜன் தெரி­வித்­தார்.

உரிமைத்தொகை அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.

இதை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

சோழர் அருங்­காட்­சி­ய­கம்

சோழப் பேர­ர­சின் புகழை உல­க­றி­யச் செய்­யும் வித­மாக தஞ்சை­யில் சோழர் அருங்­காட்சி­யகம் அமைக்­கப்­படும் என்று தமிழக அரசு அறி­வித்­துள்­ளது.

தமிழ் உலக மொழி­யா­கத் திகழ பண்­பாட்டு மாநாடு

தமிழ் மொழி உலக மொழி­யாகத் திகழ பண்­பாட்டு மாநாடு நடத்­தப்­படும் என்­றும் தொழில்­நுட்பத் துறை­யில் தமிழ் மொழியை வளர்க்க இந்த மாநாடு துணை நிற்­கும் என்­றும் நிதி­ய­மைச்­சர் தனது அறி­விப்­பில் குறிப்­பிட்­டார்.

தமி­ழர் பண்­பாட்­டுத் தலங்களை இணைக்க பய­ணங்­கள் ஊக்­கு­விக்­கப்­படும் என்­றும் 591 தமிழ் அறி­ஞர்­க­ளுக்கு கட்­ட­ணம் இல்லா பேருந்து பயண அட்டை வழங்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

நாட்­டுப்­புற கலை­க­ளைப் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் நிதி­ய­மைச்­சர் உறுதி அளித்தார்.

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.17,500 கோடி

தமி­ழ­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட இருக்­கும் மெட்ரோ ரயில் திட்­டங்­க­ளுக்­காக அரசு ரூ.17,500 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­துள்ளது.

மது­ரை­யின் மையப்­ப­கு­தி­யில் நிலத்­துக்­க­டி­யில் மெட்ரோ ரயில் பாதை அமைக்­கப்­படும் என்று குறிப்­பிட்ட நிதி­ய­மைச்­சர், இதற்­காக ரூ.8,500 கோடி ஒதுக்­கப்­படு­வ­தாக அறி­வித்­தார்.

மதுரை நக­ரம் தென்­ன­கத்­தின் வளர்ச்­சிக்கு மைய­மாக விளங்­கும் வகை­யில் மெட்ரோ ரயில் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

கோவை­யில் ரூ.9,000 கோடி­யில் மெட்ரோ ரயில் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கோவை, மதுரை நக­ரங்­களை மேம்­ப­டுத்த எழில்­மிகு கோவை, மாம­துரை வளர்ச்­சித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­படும்.

பத்திரப் பதிவுக் கட்டணம் குறைப்பு

தமி­ழ­கத்­தில் நிலம் வாங்­கு­பவர்­க­ளின் சுமை­யைக் குறைக்க ஏது­வாக பதி­வுக் கட்­ட­ணத்தை நான்கு விழுக்­காட்­டில் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்­துள்­ளது.

மேலும், இனி சொத்து விற்­பனை, நன்­கொடை, பரி­மாற்­றம் ஆகிய ஆவ­ணங்­க­ளுக்­கான முத்­திரை தீர்வை குறித்த புதிய அறி­விப்­பு­க­ளை­யும் நிதி­ய­மைச்­சர் வெளி­யிட்­டார். இதன் மூலம் எளிய, நடுத்­தர மக்­க­ளுக்கு, குறிப்­பாக வங்­கிக் கடன் மூலம் வீடு வாங்­கு­ப­வர்­கள் பெரி­தும் பய­ன­டை­வர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச இணையச் சேவை

விவ­சாய கடன் தள்­ளு­ப­டிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்­கீடு செய்்வ­தாக தமி­ழக அரசு அறி­வித்­ததை விவ­சா­யி­கள் வர­வேற்­றுள்­ள­னர். இதற்­காக ரூ.2,393 கோடி ஒதுக்­கீடு செய்­துள்­ள­தாக நிதி­ய­மைச்­சர் சட்­டப்­பே­ர­வை­யில் தெரி­வித்தார்.

சென்னை, தாம்­ப­ரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாந­க­ராட்­சி­க­ளின் முக்கிய பொது இடங்­களில் இல­வச இணை­யச் சேவை­கள் வழங்­கப்­படும்.

400 கோவில்களில் குடமுழுக்கு

வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்டப் பணிகள் ரூ.485 கோடியில் மேற்கொள்ளப்படும்.

பள்ளிவாசல், தேவாலயங் களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

செம்மொழிப் பூங்கா

கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா இரு கட்டங்களாக அமைக்கப்படும்.

முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றார் நிதியமைச்சர்.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை: எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்டு ஜன­வரி 10, 11ஆம் தேதி­களில் சென்­னை­யில் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெ­றும் என நிதி­ய­மைச்­சர் தெரி­வித்தார்.

2030ஆம் ஆண்­டிற்­குள் ஒரு டிரில்­லி­யன் டாலர் என்ற பொரு­ளி­யல் இலக்கை நோக்­கிச் செல்­வ­தற்கு ஏற்ப இம்மாநாடு நடத்­தப்­படவுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தொழில்­கள் செழிக்­கும் தமிழ்­நாட்­டின் தனிச் சிறப்­பு­க­ளை­யும் முத­லீட்டை ஈர்ப்­ப­தற்கு உகந்த சூழ­லை­யும் எடுத்­துக்­காட்­டும் தள­மாக இம்­மா­நாடு அமை­யும் என்­றும் மாநாட்­டுக்­காக ரூ.100 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் நிதி­ய­மைச்­சர் கூறினார்.

"விரு­து­ந­கர், வேலூர், கள்­ளக்­கு­றிச்சி, கோவையில் புதிய சிப்­காட் தொழில் பூங்­காக்­கள் ரூ.410 கோடி மதிப்­பீட்­டில் அமைக்­கப்­படும். தைவான் காலணி உற்­பத்­தி­யா­ளர்­கள் சங்­கத்­து­டன் 'தமிழக வழி­காட்டி' நிறு­வ­னம் புரிந்­து­ணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது," என்­றார் அவர்.