தந்தையின் சடலம் முன் நடந்த திருமணம்

தந்தையின் சடலம் முன் நடந்த திருமணம்

1 mins read
ddcbdb91-6c7f-4aa2-817d-b8c422a46492
-

கள்­ளக்­கு­றிச்சி: திரு­ம­ணத்­துக்கு முன்பு எதிர்­பா­ரா­த­வி­த­மாக மண­ம­க­னின் தந்தை உயி­ரி­ழந்­ததை அடுத்து, மண­மக்­கள் அவரது உடல் முன்பு திரு­ம­ணம் செய்து கொண்­ட­னர். மனதை உருக்­கும் இந்­தச் சம்­ப­வம் கள்ளக்­கு­றிச்சி பகு­தி­யில் நடந்­துள்­ளது.

அங்­குள்ள பெரு­வங்­கூர் கிராமத்­தைச் சேர்ந்­த­வர் ராஜேந்­தி­ரன். இவ­ரது மகன் பிர­வீ­னுக்கு எதிர்­வ­ரும் 27ஆம் தேதி திரு­மணம் நடை­பெற இருந்­தது.

இந்­நி­லை­யில், திடீர் உடல் நலக்­கு­றை­வால் ராஜேந்­தி­ரன் நேற்று முன்­தி­னம் கால­மா­னார்.

இத­னால் மண­மக்­க­ளின் குடும்­பத்­தார் சோகத்­தில் மூழ்­கினர். ராஜேந்­தி­ர­னுக்கு அஞ்­சலி செலுத்த மண­ம­கள் சொர்­ண­மால்யா சென்­னை­யில் இருந்து புறப்­பட்டு கள்­ளக்­கு­றிச்சி வந்தடைந்­தார்.

அப்­போது அவ­ரி­டம் பேசிய மண­ம­கன் பிர­வீன், தனது தந்தை­யின் ஆசிர்­வா­தத்­து­டன் திரு­மணம் செய்­து­கொள்ள விரும்­பி­ய­தா­க­வும் தந்தை கால­மா­கி­விட்­டா­லும் அவ­ரது உடல் முன்பு சொர்ண­மால்­யாவை கைப்­பி­டிக்க விரும்­பு­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

மண­ம­களும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் இதற்கு சம்­ம­திக்க, மண­மக்­கள் இரு­வ­ரும் உட­ன­டி­யாக திரு­மண கோலத்­துக்கு மாறி­னர். பின்­னர் உயி­ரி­ழந்த ராஜேந்­தி­ரன் முன்பு நின்று சொர்ண­மால்யா கழுத்­தில் கண்ணீர் மல்க தாலி கட்­டி­னார் பிர­வீன். அப்­போது மண­ம­களும் துக்க நிகழ்­வுக்­காக கூடி­யி­ருந்­த­வர்­களும் கண்­ணீர் சிந்­தி­னர்.