அரசு: கொரோனா தொற்று அதிகரித்தாலும் மக்கள் பீதி அடையத் தேவை இல்லை

அரசு: கொரோனா தொற்று அதிகரித்தாலும் மக்கள் பீதி அடையத் தேவை இல்லை

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் உருமாறிய ஓமிக்­ரான் வகை கொரோனா தொற்று பரவி வருவ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், இந்­தத் தொற்­றுப் பர­வ­லால் பெரிய அள­வில் பாதிப்பு­கள் ஏற்­ப­ட­வில்லை என்றும் பொது­மக்­கள் பீதி அடையத் தேவை­யில்லை என்­றும் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றுப் பாதிப்பு மெல்ல அதி­கரித்து வரு­வ­தை­ய­டுத்து, நேற்று அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை மேற்­கொண்­டார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

அதன் பின்­னர் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அவர், மகா­ராஷ்­டிரா, குஜ­ராத், கேரளா, கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் கொரோனா தொற்­றுப்பர­வல் அதி­க­ரித்து வரு­கிறது என்­றார்.

"தமி­ழ­கத்­தில் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் இருந்­தது. இந்நிலை­யில், உரு­மா­றிய ஓமிக்ரான் தொற்று தற்­போது பரவி வரு­கிறது.

"எனி­னும் புதிய வகை கொரோ­னா­வால் பெரி­ய­ள­வில் பாதிப்பு இல்லை. வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் உரிய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படு­கின்­ற­னர்.

"தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தினம் புதி­தாக 76 பேருக்கு தொற்­றுப்­பா­திப்பு ஏற்­பட்­டுள்ளது," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன்.

அரசு மருத்­து­வ­ம­னை­களில் 2,000 மெட்­ரிக் டன் அள­விற்கு உயிர்­வாயு சேமித்து வைக்­கும் திறன் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், கொரோனா இரண்­டாம் அலை­யின் போது தயார் செய்த படுக்கை வச­தி­கள் இப்­போது தயார் நிலை­யில் உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

இளங்கோவனுக்கு தொற்று

ஈரோடு கிழக்­குத் தொகுதி சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் ஈவிகே­எஸ் இளங்­கோ­வ­னுக்கு கொரோனா தொற்­றுப்­பா­திப்பு இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது.

ஏற்­கெ­னவே கடந்த 15ஆம் தேதி திடீர் நெஞ்­சு­வலி கார­ண­மாக சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அவர் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டுள்­ளார்.

அவர் குண­ம­டைந்து வரு­வ­தாக மருத்­து­வ­ம­னை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.