சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து திருட்டுப்போன 100 சவரன் நகைகளையும் 30 வைர நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அத்துடன், நான்கு கிலோ வெள்ளிப் பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கம், வைரம், நவரத்தின நகைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுகச் சிறுகக் களவாடிய பணிப்பெண் ஈஸ்வரியையும் ஓட்டுநர் வெங்கடேசனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருடிய நகைகளை விற்று ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய தற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரஜினி மகள் அளித்த புகாரை அடுத்து, அவரது வீட்டில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த ஈஸ்வரி என்ற பணிப் பெண்ணிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது வங்கி விவரங்களை ஆய்வு செய்ததில், நகைகளைத் திருடியது உறுதி செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடிய நகைகளை விற்று ஒரு வீட்டையும் அந்த வீட்டுக்குத் தேவையான பொருள்களை யும் ஈஸ்வரி வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத போது, அவரது பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த தங்க நகைகள், பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், நவரத்தின நகைகளைத் திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.
ஓட்டுநர் வெங்கடேசனுடன் சேர்ந்து நகைத் திருட்டில் ஈடுபட்டதாக ஈஸ்வரி கூறி யுள்ளார்.

