தூத்துக்குடியில் நால்வரை மணம் புரிந்த கல்யாணராமன்

தூத்துக்குடியில் நால்வரை மணம் புரிந்த கல்யாணராமன்

2 mins read
6da95b55-d771-40cd-aaf2-5864d7c4b522
-

துபாயில் வேலை பார்ப்பதாகக் கூறி தங்கநகைகள், ஏராளப் பணம் பறித்த பொறியாளர்

தூத்­துக்­குடி: 'நான் அவ­னில்லை' திரைப்­பட பாணி­யில், தூத்­துக்­குடி­யைச் சேர்ந்த நான்கு பெண்­களை அடுத்­த­டுத்து திரு­ம­ணம் செய்து, ஏமாற்றி தலை­ம­றை­வான 'கல்­யாணராமன்' வினோத் ராஜ்­குமாரை தனிப்­படைக் காவலர்­கள் சென்­னை­யில் கைது செய்­த­னர்.

தனது சித்­தப்பா, சித்தி, தங்­கை­கள் என குடும்ப உறுப்­பி­னர்­கள் 10 பேரு­டன் சேர்ந்து நான்கு பெண்­களைத் திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி 100 பவுன் தங்­கநகைகள், லட்­சக்­க­ணக்­கில் பணம் பறித்­ததை விசாரணையில் வினோத் ஒப்­புக்­கொண்­டார்.

இதையடுத்து, தூத்­துக்­குடியில் உள்ள பேரூ­ரணி சிறை­யில் அவர் அடைக்­கப்பட்­டார்.

சென்­னை­யைச் சேர்ந்­த­வர் பொறி­யா­ள­ரான வினோத் ராஜ்­கு­மார். இவ­ருக்­கும் தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த பெண்­ணுக்­கும் கடந்த 2007ல் திரு­ம­ணம் நடை­பெற்­றது. அதன்­பி­றகு இரு­வ­ருக்­கும் இடையே ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக 2010ல் விவா­க­ரத்து பெற்­ற­னர்.

அதன்­பி­றகு 'மேட்­ரி­மோனி' இணை­யத் தளம் வழி, தனக்கு ஏற்­கெ­னவே திரு­ம­ணம் நடந்­த­தைக் கூறா­மல் இரண்­டா­வது திரு­ம­ணத்­துக்கு வினோத் பெண் தேடி­யுள்­ளார்.

தான் துபா­யில் வேலை பார்ப்­ப­ தா­க­வும் திரு­ம­ணம் முடிந்­த­தும் மனை­வியைத் துபாய்க்கு அழைத்­துச் சென்று விடு­வ­தா­க­வும் கூறி மற்றொரு தூத்­துக்­குடி பெண்ணை இரண்­டா­வது திரு­மணம் செய்­துள்­ளார்.

திரு­ம­ணத்­துக்கு 80 சவ­ரன் தங்க நகை, 4 லட்­சம் ரொக்­கப் பணம், துபா­யில் வசிப்­ப­தற்கு தேவை­யான பொருள்­களை வாங்­கு­வ­தற்­கான பணம் என அனைத்­தை­யும் பெண் வீட்­டார் தரப்­பில் கொடுத்துள்ளனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இத­னி­டையே, மூன்­றா­வ­தாக தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த விவா கரத்து பெற்ற பெண்ணை சமூக ஊட­கம் வழி அறி­மு­க­மாகி, திரு­ம­ணம் செய்­துள்­ளார். இவர்­களுக்கு ஒரு குழந்­தை உள்­ளது.

இந்­நி­லை­யில், வினோத் மற்ற பெண்­க­ளு­டன் கைப்­பே­சி­யில் மணிக்­க­ணக்­கில் பேசு­வதை மூன்­றா­வது மனைவி கண்­டித் துள்­ளார்.

இதை­ய­டுத்து, உன்­னைப் போன்று ஏற்­கெ­னவே இரண்டு பெண்­களைத் திருமணம் செய் துள்ளேன். அத்துடன், பொதுப்­பணித் துறை­யில் பணி­பு­ரி­யும் ஒரு பெண்ணை நான்­கா­வ­தாக திரு­ம­ணம் செய்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

வினோத்தின் கல்­யாண லீலை­களைக் கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்த மூன்­றா­வது மனைவி தூத்­துக்­குடி மக­ளிர் காவல்நிலை­யத்­தில் புகார் அளித்தார்.

இப்புகாரை அடுத்து தலை­மறை­வான வினோத்தை தேடி வந்த தனிப்­படை காவல்­துறை­யி­னர், சென்­னை­யில் பதுங்கி இருந்தபோது அவரைக் கைது செய்­தனர். அவ­ரது திரு­ம­ணத்­துக்கு உடந்­தை­யாக இருந்த 10 பேரி­டமும் விசா­ரணை நடந்து வருகிறது. மூன்­றாவது மனை­வி­யி­டம் இருந்து பல லட்சம் ரூபாய் பணம், நகை­களை அப­க­ரித்­துள்­ளதும் தெரி­யவந்துள்ளது.