முதல்வர் ஸ்டாலின்: காற்றைப்போல தண்ணீரும் முக்கியமானது

முதல்வர் ஸ்டாலின்: காற்றைப்போல தண்ணீரும் முக்கியமானது

1 mins read

சென்னை: வழக்­கம்­போல் நேற் றைய தேதி­யில் (மார்ச் 22) கடைப்­பி­டிக்­கப்­படும் உலக தண்­ணீர் தினத்தை ஒட்டி, உலக உயிர்­க­ளின் நாடி­யாக விளங்­கும் தண்­ணீரை நாம் காக்­க­வேண்­டும் என்­றும் நம்­மைக் காக்­கும் தண்­ணீரை வீணாக்­கக்­கூ­டாது என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி உள்­ளார்.

இது­கு­றித்து காணொளி ஒன்றை வெளி­யிட்­டுள்ள அவர், "உயிர் வாழ காற்று எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அதே அள­விற்கு தண்­ணீ­ரும் முக்­கி­ய­மா­னது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"தண்­ணீர் என்று சொல்­லா­மல் 'அமிழ்­தம்' என்­ற­வர் திரு­வள்­ளு­வர். இந்த தண்­ணீர்­தான் புவி வெப்­ப­ம­ய­மா­த­லில் இருந்து காக்­கிறது. நீரில்­லை­யேல் உயிர்­கள் இல்லை என்­பதை உணர்ந்து செயல்­ப­டு­வோம்," என்று கூறி­யுள்­ளார்.

"திரு­மந்­தி­ர­மும், தேவா­ர­மும், திரு­வா­ச­க­மும் தண்­ணீ­ரின் அவ­சி­யத்தை அழ­குத் தமி­ழில் சொல்­கின்­றன. நம் உட­லில் அனைத்து செயல்­பா­டு­களும் முறை­யாக செயல்­படத் தண்­ணீர் மிக­மிக அவ­சி­யம். ஒரு மனி­த­ரால் பல நாள்­க­ளுக்கு உண­வின்றி இருக்கமுடி­யும். ஆனால் நீரின்றி இருக்­க­மு­டி­யாது. இத்­தகைய உயிர்­நா­டி­யான தண்­ணீரை நாம் காக்க வேண்­டும். அதா­வது நம்­மைக் காக்­கும் நீரை நாம் வீணாக்­கக் கூடாது," என்று ஸ்டா­லின் கூறி­யுள்ளார்.