விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 20 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காப்பகத்தில் இருந்த 16 ஆதரவற்றவர்கள் காணாமல் போனது, பாலியல் சித்திரவதை, போதை மருந்து கொடுத்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கி யிருக்கும் அன்புஜோதி ஆசிரமம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் மூன்று நாள் விசா ரணையைச் செவ்வாய்க்கிழமை முதல் நடத்தி வருகின்றனர்.
இக்குழுவினர், அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பெண்கள், 14 ஆண்கள் என ஆகிய 20 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து, ஆசிரமத்துக்குச் சென்று ஆய்வு செய்யவும் உள்ளனர்.

