அதிமுக வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் தள்ளிவைத்தது

அதிமுக வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் தள்ளிவைத்தது

1 mins read
f99e1a0a-b885-447c-951c-0279f120d2cc
-

சென்னை: அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் தேர்­த­லுக்­குத் தடை விதிக்­கக் கோரி­யும் பொதுக்­குழு தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஓ. பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் உயர்­நீ­தி­மன்­றத்­தில் தொடுத்த வழக்கு நேற்று முன்­தி­னம் மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தது.

பொதுச்­செ­ய­லா­ளர் பதவியைப் பொறுத்தவரை எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு ஆத­ர­வாக கட்­சி­யின் விதி­கள் திருத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த விதி­க­ளைத் திருத்தி நிபந்­த­னை­களை நீக்கி பொதுச்­செ­ய­லா­ளர் பத­விக்­கான தேர்­தலில் போட்­டி­யிட அனு­ம­தித்­தால் ஓ.பன்­னீர்­செல்­வம் போட்­டி­யிட தயா­ராக உள்­ள­தா­க­வும் ஓபி­எஸ் தரப்பு வாதிட்­டது.

இதை எதிர்த்து வாதிட்ட எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­க­ளின் குரலை ஒடுக்­கும் வகை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பில் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்­ளது என்று கூறியது.

தாங்­கள்­தான் உண்மையான கட்சி என்­றால் தேர்­தல் ஆணை­யத்­தில், மக்­கள் மன்­றத்­தில் தங்­க­ளின் பலத்தை ஓ. பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் மெய்ப்­பிக்க வேண்­டும் என்­றும் பழ­னி­சாமி தரப்பு வாதிட்­டது.

வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில்தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் அது கூறியது.

அனைத்துத் தரப்பு வாதங்­களும் நிறை­வ­டைந்த நிலை­யில், வழக்­கின் தீர்ப்பு தேதி குறிப்­பி­டப்­ப­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஓபி­எஸ் தரப்பு எழுத்­து பூர்வ வாதங்­க­ளைத் தாக்­கல் செய்ய இன்று காலை வரை அவ­கா­சம் வழங்­கப்­பட்­டது.