அடுத்த தலைவர் அவரா இவரா: காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு

அடுத்த தலைவர் அவரா இவரா: காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு

1 mins read

சென்னை: தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்டி தலை­வ­ரின் பத­விக்­கா­லம் முடிந்­து­விட்­டது. இந்த நிலை­யில், புதிய தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க கட்சி மேலி­டம் ஆலோ­சனை நடத்தி வரு­கிறது.

அடுத்த தலை­வர் பத­விக்­கான போட்­டி­யில் கார்த்­திக் சிதம்­ப­ரம் உள்­ளிட்ட பல­ரும் மும்­மு­ர­மாக களத்­தில் குதித்து இருப்­ப­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டி­யின் இப்போதைய தலை­வ­ரான கே எஸ் அழ­கிரியின் பத­விக்­காலம் முடிந்­து­விட்­டது.

கட்­சி­யின் தலை­வரான மல்லி­கார்­ஜுன கார்கே, அண்­மை­யில் கட்­சி­யின் மூத்த தலை­வர் சிதம்­ ப­ரத்­து­டன் ஆலோ­சனை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே இந்­தப் போட்­டி­யில் ஜோதி­மணி எம்.பி., விஜ­ய­தரணி ஆகி­யோ­ரும் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு இருக்­கின்­ற­னர். இப்­போது சிதம்­ப­ரத்­தின் புதல்­வ­ரான கார்த்­திக் சிதம்­ப­ரத்­தின் பெய­ரும் பர­ப­ரப்­பாக அடி­ப­டு­கிறது.

மொத்­தத்­தில் தமி­ழக காங்­கிரஸ் கமிட்டி அடுத்த தலை­வரை எதிர்­பார்த்து படு உற்­சா­கத்­தி­லும் பர­ப­ரப்­பி­லும் இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.