மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

1 mins read
df6bf51f-ad88-4969-abac-5a98434224f4
-

சென்னை: தங்­க­ளுக்­கான ஊதிய உயர்வு குறித்த அர­சா­ணையை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தக் கோரி தமி­ழக அரசு மருத்­து­வர்­கள் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தப் போராட்­டத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட மருத்­து­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.

பணி­மூப்பு அடிப்­ப­டை­யில் பதவி, ஊதிய உயர்வு வழங்க வேண்­டும் என்று தமி­ழக அரசு முன்பு அறி­வித்­தி­ருந்­தது. இந்த அறி­விப்பு தொடர்­பில் மருத்­து­வர்­க­ளுக்­கான சங்­கங்­க­ளுக்கு இடையே கருத்து வேறு­பா­டு­கள் நிலவி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், தமிழ்­நாடு அரசு மருத்­து­வர்­கள் சங்­கம், சில கோரிக்­கை­களை முன்­வைத்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொள்­வ­தாக அறி­வித்­தது.

இதை­ய­டுத்து அர­சுத்­த­ரப்­பில் சில அதி­கா­ரி­கள் மருத்­து­வர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

அப்­போது தகுதி வாய்ந்த மருத்­து­வர்­கள் பதவி, ஊதிய உயர்­வுக்கு விண்­ணப்­பிக்­க­லாம் என்­றும் நிபு­ணத்­துவ அடிப்­ப­டை­யில் ஊதிய உயர்வு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் சுகா­தா­ரத்­துறை சார்­பில் உறுதி அளிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து போராட்­டத்­தில் ஈடு­பட்ட மருத்­து­வர்­கள் கலைந்து சென்­ற­னர்.

எனினும் அரசு இந்த உறுதி மொழியில் இருந்து பின்வாங்கும் பட்சத்தி்ல மீண்டும் போராட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மருத் துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.