தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொலை மிரட்டல்: அதிமுக எம்எல்ஏ புகாரால் பரபரப்பு

1 mins read

சென்னை: ஓ.பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­கள் தமக்கு கொலை மிரட்­டல் விடுப்­ப­தாக அரக்­கோணம் தொகுதி அதி­முக எம்­எல்ஏ ரவி காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

இத­னால் அதி­முக வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பு நில­வு­கிறது.

இது­கு­றித்து சென்னை காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இணைய வழி சூதாட்­டத்­துக்குத் தடை­வி­திக்க ஏது­வாக தமி­ழக அரசு புதிய சட்ட மசோ­தாவை பேர­வை­யில் மீண்­டும் தாக்­கல் செய்­தது.

அப்­போது ஓ.பன்­னீர்­செல்­வம், எடப்­பாடி பழனிசாமி ஆத­ர­வா­ளர்­கள் இடையே மோதல் வெடித்­தது.

இரு தரப்­புக்­கும் ஆத­ர­வாக சிலர் குரல் கொடுத்­த­னர். மனோஜ் பாண்­டி­யன், அதிமுகவின் அருண்­கு­மார், ரவி கோவிந்­த­ராஜ் ஆகி­யோர் இடையே கடும்்் வாக்­கு­வா­தம் நடந்­தது.

இந்த மோத­லின் எதி­ரொ­லி­யா­கவே தமக்கு மிரட்­டல் விடுக்கப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறையில் அளித்­துள்ள புகா­ரில் எம்எல்ஏ ரவி குறிப்­பிட்­டுள்­ளார்.