தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்து

தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்து

2 mins read

சென்னை: உயர் நீதி­மன்­றத்­தின் அலு­வல் மொழி­யாக தமிழை அறி­விக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி நடப்பு சட்­டப்­பே­ர­வைக்கூட்­டத்­தொ­ட­ரில் மீண்­டும் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்டும் என பாமக நிறு­வ­னர் ராமதாஸ் கூறி­யுள்­ளார்.

அத்­தீர்­மா­னத்தை மத்­திய அர­சுக்கு உட­ன­டி­யாக அனுப்பி வைக்க வேண்­டும் என்­றும் அவர் அறிக்கை ஒன்­றில் அறி­வு­றுத்தி உள்­ளார்.

தமி­ழ­கத்­தில் இருந்து அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் அடங்­கிய குழுவை அனுப்பி பிர­த­ம­ரை­யும் மூத்த வழக்­க­றி­ஞர்­கள் குழுவை அனுப்பி உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யை­யும் சந்­தித்து இந்த கோரிக்­கையை வலி­யு­றுத்த அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று ராம­தாஸ் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

வெவ்­வேறு கார­ணங்­கள், காலச்­சூ­ழல் கார­ண­மாக தமிழை உயர் நீதி­மன்ற அலு­வல் மொழி­யாக அறி­விப்­பது தடை­பட்டு வரு­வதை அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் அலு­வல் மொழி­யாக தமிழை அறி­விக்­கும் திட்­டத்தை உச்ச நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொள்ள­வில்லை என்­ப­தால், அதை செயல்­ப­டுத்த முடி­யாது என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

"உச்ச நீதி­மன்­றத்­தின் முடிவு என்­பது நீண்ட நாள்க­ளுக்கு முந்­தை­யது என்­ப­தா­லும், அதன்­பின் சூழ்­நிலை மாறி­யி­ருப்­ப­தா­லும் தமிழை உயர் நீதி­மன்ற அலு­வல் மொழி­யாக்­கும் முயற்சி மீண்­டும் தொடங்­கப்­பட வேண்­டும்," என்­பதே ராம­தா­சின் கோரிக்­கை­யா­கும்.

சென்னை உயர் நீதி­மன்­றம் மட்­டு­மன்றி, கர்­நா­ட­கம், குஜ­ராத், சத்­தீஸ்­கர், மேற்கு வங்­கம் ஆகிய மாநி­லங்­க­ளின் உயர் நீதி­மன்­றத்­தி­லும் மாநில மொழி­களை அலு­வல் மொழி­யாக்க வேண்­டும் என்ற கருத்­துரு பற்றி உச்ச நீதி­மன்­றத்­தி­டம் கருத்து கேட்­கப்­பட்­ட­தா­க­வும் ஆனால், அந்த கருத்­து­ருவை ஏற்க உச்ச நீதி­மன்­றத்­தின் முழு அமர்வு மறுத்து விட்­ட­தா­க­வும் மத்­திய சட்ட அமைச்­சர் கிரண் ரிஜிஜு தெரி­வித்­துள்­ளார்.

அதை தமது அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ராம­தாஸ், மத்­திய அரசு, உச்ச நீதி­மன்­றத்­தின் நிலைப்­பா­டு­கள் மாநில மொழி­க­ளுக்கு எதி­ரா­னவை எனச் சாடி உள்­ளார்.

"சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் அலு­வல் மொழி­யாக தமிழை அறி­விக்­கக் கோரும் தீர்­மா­னம் 2006ஆம் ஆண்டு டிசம்­பர் 6ஆம் தேதி அப்­போ­தைய முதல்­வர் கரு­ணா­நி­தி­யால் கொண்டு வரப்­பட்டு சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்­டது.

"அத்தீர்­மா­னம் கொண்­டு­வரப்­ப­டு­வ­தற்கு பாமக கொடுத்த அழுத்­தம் தான் கார­ண­மாக இருந்­தது. ஆனால், அதன் பின் 17 ஆண்­டு­கள் ஆகி­யும் தமிழ் அலு­வல் மொழி­யா­க­வில்லை," என்று ராம­தாஸ் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் அலு­வல் மொழி­யாக தமிழை அறி­விக்க மத்­திய அரசு எவ்­வ­கை­யி­லும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் நிலைப்­பாடு தான் தடை­யாக உள்­ளது எனக் கூறி­யுள்­ளார்.