சீமான்: நாடு முழுவதும் மாற்று அணி உருவாக வேண்டும்

சீமான்: நாடு முழுவதும் மாற்று அணி உருவாக வேண்டும்

1 mins read

சென்னை: எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாஜ­கவை வீழ்த்த வேண்­டும் எனில் நாடு முழு­வ­தும் மாற்று அணி ஒன்று உரு­வாக வேண்­டும் என சீமான் கூறி­யுள்­ளார்.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது ராகுல் காந்­தி­தான் பிர­த­மர் வேட்­பா­ளர் என கூட்டணி கட்­சி­க­ளோடு கலந்­தா­லோசிக்­காமல் அறி­விக்­கப்­பட்­ட­தால், அந்த அணி சித­றுண்டு போன­தாக திருச்­சி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"பிர­த­மரை விமர்­சிக்­கவே கூடாதா, அவர் விமர்­ச­னத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வரா என்று கேள்வி எழுப்­பிய அவர், அரசை விமர்­ச­னம் செய்­வது குற்­ற­மில்லை என நீதி­மன்­றமே கூறி­யுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

நிலைமை இவ்­வாறு இருக்க, சூரத் நீதி­மன்­றத்­தில் ராகுல் காந்­திக்கு தண்­டனை விதித்து இருப்­பதை படிக்­கும்­போது தமக்கு சிரிப்பு வரு­வ­தாக சீமான் தெரி­வித்­தார்.

"கடந்த மக்­க­ள­வைத் தேர்­தலின்­போது அவ­சர முடி­வு­களை எடுத்­த­து­போல் அடுத்த முறை­யும் எதிர்க்­கட்­சி­கள் செயல்­ப­டக்­கூடாது. பழை­ய­படி செயல்­பட்­டால் சிக்­கல் ஏற்­படும்.

"நாம் தமி­ழர் கட்சி எதிர்­வ­ரும் மக்­க­ளவை, சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­களில் தனித்­து­தான் போட்­டி­யி­டும். எங்­கள் தலை­மை­யில் கூட்­டணி அமைக்க மற்ற கட்சிகள் முன்­வ­ருமா என்­பது குறித்து இப்­போதே ஏதும் கூற இய­லாது," என்­றார் நாம் தமி­ழர் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான சீமான்.