இணையச் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பியதாகத் தகவல்

இணையச் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பியதாகத் தகவல்

1 mins read

சென்னை: தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் மீண்­டும் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள இணைய வழி சூதாட்­டத்­துக்கு எதி­ரான புதிய சட்ட மசோதா நேற்று ஆளு­ந­ருக்கு அனுப்­பப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தச் சட்ட மசோதா சில மாதங்­க­ளுக்கு முன்பே பேர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்டு ஆளுநரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பப்­பட்­டது. எனி­னும், அதற்கு ஒப்­பு­தல் அளிக்க ஆளு­நர் மறுத்­து­விட்டார். மேலும், அதற்­கான கார­ணங்­க­ளை­யும் அவர் விவ­ரித்­திருந்­தார்.

இந்­நி­லை­யில், இணை­ய­வழி சூதாட்­டத்­துக்குத் தடை விதிக்­கும் மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் மீண்­டும் நிறை­வேற்­றப்­பட்­டது. அது நேற்று ஆளு­ந­ரின் பார்­வைக்­கும் ஒப்­பு­த­லுக்­கும் தமி­ழக அர­சால் அனுப்­ப­ப்பட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இணைய வழி சூதாட்­டத்­துக்குத் தடை­வி­திப்­ப­தற்­கான கார­ணங்­களை தமி­ழக அரசு விரி­வா­கக் குறிப்­பிட்­டுள்­ளது. இத்­த­கைய சட்­டத்தை இயற்­றும் அதி­கா­ரம் மாநில அர­சுக்கு உள்­ள­தா­க­வும் அரசு தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.

எந்­த­வொரு மசோ­தா­வாக இருந்­தா­லும் மாநில சட்­டப்­பே­ர­வை­யில் இரு­முறை நிறை­வேற்­றப்­பட்டு ஆளு­ந­ரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பப்­பட்­டால் அவர் தனது ஒப்­பு­தலை வழங்­கியே ஆக வேண்­டும். எனவே இம்­முறை ஆளு­நர் ஒப்­பு­தல் அளிப்­பார் என்­பது உறுதி," என திமுக வட்­டா­ரங்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளன.

இணையவழி சூதாட்ட தடைச்சட்ட மசோதா தொடர்பாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிலவி வரும் மறைமுக மோதல் முடிவுக்கு வருமா என்பது விரைவில் தெரியவரும்.