கீழடி அருங்காட்சியகம், தொல் பொருள்களைப் பார்த்து வியந்த மெக்சிகோ நாட்டுத் தூதர்

கீழடி அருங்காட்சியகம், தொல் பொருள்களைப் பார்த்து வியந்த மெக்சிகோ நாட்டுத் தூதர்

1 mins read
f96f4702-ce70-43bc-b050-99be85cc77b5
-

சிவ­கங்கை: கீழடி அருங்­காட்­சி­ய­கத்­தில் உள்ள தொல்பொருள்­கள் தமக்­குப் பெரும் வியப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக இந்­தி­யா­வுக்­கான மெக்­சிகோ நாட்­டின் தூதர் பெட­ரிக்கோ சலாஸ் லோட்பி தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் தூதர் பெட­ரிக்­கோ­வும் மெக்­சிகோ தூத­ரக அதிகா­ரி­களும் இந்த அருங்­காட்சி­யகத்துக்கு வருகை தந்­த­னர்.

பின்­னர் அருங்­காட்­சி­யகத்­தில் உள்ள அனைத்துப் பொருள்­க­ளை­யும் பார்­வை­யிட்ட அவர், தனது வியப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­தாகக் கீழடி ஊராட்சி மன்றத் தலை­வர் கூறினார். தொல்பொருள்­க­ளின் வர­லாறு குறித்­தும் தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரி­யம் தொடர்­பா­க­வும் அதி­கா­ரி­க­ளி­டம் அவர் அனைத்துத் தக­வல்­க­ளை­யும் ஆர்­வத்­து­டன் கேட்­ட­றிந்­தார்.

மேலும் 7ஆம் கட்ட அக­ழாய்வு நடந்த தளம் திறந்­த­வெளி அருங்­காட்­சி­ய­க­மாக மாற்­றப்­பட்­டுள்­ளதை அறிந்து அத­னை­யும் மெக்­சிகோ தூதர் பார்­வை­யிட்­ட­தா­க­வும் கீழடி அருங்­காட்­சி­ய­கத்­திற்கு வெளி­மா­நி­லங்­கள், வெளி­நா­டு­களில் இருந்­தும் ஏரா­ள­மா­னோர் வருகை புரி­வதாகவும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.