சென்னை: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அவர், முன்பு குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது ஜிஎஸ்டி வரிவிதிப்பை நரேந்திர மோடியும் எதிர்த்ததாகக் குறிப்பிட்டார்.
அச்சமயம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும்கூட இந்த வரிவிதிப்பை ஆதரிக்கவில்லை என்றார்.
"எனினும், தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.32 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். நிதி இருந்தால்தானே அதைச் செலவு செய்ய முடியும். கடனை ஏற்றிக்கொண்டே சென்றால் வட்டிச்சுமை அதிகரிக்கும். அன்று மதிப்புக் கூட்டு (வாட்) வரியை ஒரு விழுக்காடு உயர்த்திய பிறகுதான், சத்துணவுத் திட்டத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் செயல்படுத்த முடிந்தது," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

