கேரளா: கேரள மாநிலம் கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் இல்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கொச்சி அனைத்துலக விமான நிலையத்தில் கடலோர காவல்படைக்குச் சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது.
சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக அந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என்று கடலோர காவல்படை விளக்கியது.
அந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது குறித்து விசாரணை நடக்கிறது.


