மோடி: கர்நாடகாவை ஏடிஎம் இயந்திரமாகக் கருதும் காங்கிரஸ்

மோடி: கர்நாடகாவை ஏடிஎம் இயந்திரமாகக் கருதும் காங்கிரஸ்

2 mins read
5a5213a9-84ed-4631-aadb-819e76e53845
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்தை வளர்ச்­சி­ய­டைய வேண்­டிய ஒரு மாநி­ல­மாக பாஜக பார்ப்­ப­தா­க­வும் ஆனால், காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் கர்­நா­ட­காவை பணம் கொடுக்­கும் ஏடி­எம் இயந்­தி­ர­மா­கப் பார்ப்­ப­தா­க­வும் பிர­த­மர் நரேந்­திர மோடி கார­சா­ர­மாக குற்­றம் சுமத்­தி­னார்.

கர்­நா­டக மாநி­லத்­தின் தாவ­ன­கரே நக­ரில் நடந்த விஜய் சங்­கல்ப் யாத்­திரை நிறைவு விழா பொதுக்கூட்­டத்­தில் உரை­யாற்­றிய பிர­த­மர், காங்­கி­ர­சி­டம் கர்­நா­டக மக்­கள் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக நடந்­து­கொள்ள வேண்­டும் என்­றார்.

இல்லை என்­றால் இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் அந்­தக் கட்சி நடந்து கொண்­ட­தைப் போலவே கர்­நா­ட­கத்­தி­லும் மக்­களை காங்­கி­ரஸ் ஏமாற்­றி­வி­டும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் ஏரா­ள­மான தேர்­தல் வாக்­குறுதி­களை அளித்த காங்­கி­ரஸ் கட்சி, அண்­மை­யில் அங்கு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்­தது.

ஆனால், வாக்­கு­று­தி­களில் ஒன்­று­கூட வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இல்லை.

இது­தான் காங்­கி­ரஸ் கட்­சி­யின் அர­சி­யல் லட்­ச­ணம் என்று பிர­த­மர் மோடி சாடி­னார். பொய் வாக்­கு­று­தி­களை அள்­ளி­வி­டும் காங்­கி­ரசை கர்­நா­ட­கா­வில் காலூன்­ற­வி­ட­லாமா என்றும் பிரதமர் திரு மோடி வின­வி­னார்.

"காங்­கி­ரஸ் எனக்கு குழி தோண்­டு­வது போல கனவு காண்­கிறது. ஆனால், கர்­நா­டக மக்­களோ தங்­கள் மாநி­லத்­தில் எப்­ப­டி­யும் தாம­ரையை மல­ரச் செய்­து­விட வேண்­டும் என்ற உறு­தி­யு­டன் இருக்­கி­றார்­கள்.

"கொவிட்-19 சூழ­லில்­கூட கர்­நா­டக மாநி­லம் அதிக முத­லீ­டு­களை ஈர்த்து சாதனை படைத்­தது. இந்­தச் சாத­னை­யைப் படைத்த முதல்­வ­ருக்கு ஆத­ரவு அளிக்க வேண்­டிய கடமை மக்­களுக்கு இருக்­கிறது," என்­றும் திரு மோடி குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, கர்­நா­ட­கா­வில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கெண்­டுள்ள உள்­துறை அமைச்­சர் அமித் ஷா பிதார் என்ற நக­ரில் 103 அடி உயர தேசிய கொடி ஒன்றை ஏற்றி வைத்­தார்.

சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் நினை­வ­கம் ஒன்­றையும் திறந்­து­வைத்­தார்.

பிறகு அந்த நக­ரில் உரை­யாற்­றிய அமித் ஷா, கொரோட்டா கிரா­மத்­தில் அன்று 2.5 அடி உயர மூவர்ண கொடியை ஏற்­றி­ய­தற்­காக நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்ட அதே நிலத்­தில் இப்­போது 103 அடி உயர மூவர்ணக் கொடி ஏற்­றப்­பட்டு இருக்­கிறது என்று பெரு­மிதத்­து­டன் கூறி­னார்.