தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளிர் உரிமைத்தொகை: தமிழக அமைச்சர் விளக்கம்

1 mins read

மதுரை: தமி­ழக அரசு அறி­வித்­துள்ள மக­ளிர் உரி­மைத்தொகை­யா­னது உரி­ய­வர்­க­ளுக்கு மட்­டுமே வழங்­கப்­படும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தமி­ழக அர­சின் குடிசை மாற்று வாரிய குடி­யி­ருப்­பில் வசிக்­கும் அனை­வ­ருக்­கும் உரி­மைத் தொகை கிடைக்­கும் என்­றார்.

"ஏழை எளிய மக்­கள் என அடை­யா­ளம் காணப்­ப­டு­ப­வர்­களில் நூறு விழுக்­காட்­டி­ன­ரும் இத்­தொ­கையை எதிர்­பார்க்­க­லாம். உரிமை உள்­ள­வர்­க­ளுக்கு இத்­தொகை போய்ச்­சேர வேண்­டும் என்­ப­தில் அரசு உறு­தி­யாக உள்­ளது," என்­றார் அமைச்­சர் மா.சுப்பிர­ம­ணி­யன்.