டி.எம்.சௌந்தரராஜனுக்கு சிலை வைக்க கோரிக்கை

டி.எம்.சௌந்தரராஜனுக்கு சிலை வைக்க கோரிக்கை

1 mins read

சென்னை: மறைந்த பின்­ன­ணிப் பாட­கர் டி.எம்.சௌந்­த­ர­ரா­ஜ­னுக்கு மது­ரை­யில் சிலை அமைக்க வேண்­டும் என்று மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அக்­கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் கே.பால­கி­ருஷ்­ணன், டிஎம்­எஸ் மது­ரை­யில் பிறந்து, வாழ்ந்த பகு­தி­யில் அந்த உரு­வச் சிலையை நிறுவ வேண்­டும் என்று கேட்­டுக்­ கொண்­டுள்­ளார்.

"சென்­னை­யில் டிஎம்­எஸ் வாழ்ந்த வீடு அமைந்­தி­ருக்­கும் மந்­தை­வெளி பகு­தி­யில் உள்ள வெளி­வட்­டச் சாலைக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­பட்­டது மகிழ்ச்சி தரு­கிறது. ஏ.ஆர்.ரகு­மான் இசை­யில் உரு­வான `செம்­மொழி­யான தமிழ் மொழி­யாம்' என்ற பாட­லில் இறு­தி­யில் டிஎம்­எஸ் குர­லும் பங்­கேற்­பும் இருந்­தது," என்று பாலகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.