தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: குஜராத் அமைச்சர் பாராட்டு

தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: குஜராத் அமைச்சர் பாராட்டு

1 mins read
e9b1ad23-8f29-4d52-a84e-adb1a565b336
-

திண்­டுக்­கல்: தமி­ழக மக்­கள் நட்­பைப் பேணு­வ­தி­லும் வர­வேற்பு அளிப்­ப­தி­லும் சிறந்­த­வர்­கள் என குஜ­ராத் அமைச்­சர் ருஷி­கேஷ் பாய் பட்­டேல் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், அனைத்து மொழி பேசும் மக்­களும் வாழ்­வ­தற்கு ஏற்ற பாது­காப்­பான, அமை­தி­யான மாநி­ல­மாக தமி­ழ­கம் திகழ்­கிறது என்று பாளை­யங்­கோட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

எதிர்­வ­ரும் ஏப்­ரல் 17ஆம் தேதி தொடங்கி இரு வாரங்­க­ளுக்கு குஜ­ராத் மாநி­லத்­தில் சௌராஷ்­டிர, தமிழ் சங்­க­மம் நிகழ்ச்சி நடை­பெற உள்­ளது.

இதில் தமி­ழ­கத்­தில் உள்ள சௌராஷ்­டிர மக்­கள் திர­ளா­கப் பங்­கேற்க வேண்­டும் என குஜ­ராத் அரசு அழைப்பு விடுத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், நெல்லை மாவட்­டம் பாளை­யங்­கோட்­டை­யில் நடை­பெற்ற சங்­க­மம் நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் ருஷி­கேஷ் பாய் பட்­டேல் கலந்து கொண்­டார்.

இத­னி­டையே, குஜ­ராத் மாநில பழங்­கு­டி­யின மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர் குபேர்­பாய் திண்­டோர் உள்­ளிட்ட குழு­வி­னர் நேற்று முன்­தி­னம் திண்­டுக்­கல்­லுக்கு வருகை புரிந்­த­னர். அவர்­க­ளுக்குச் சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

திண்­டுக்­கல் சௌராஷ்டிர சபா சார்­பாக பெண்­கள் கோலாட்­டம் ஆடி வர­வேற்­ற­னர். கோலாட்­டத்­தால் ஈர்க்­கப்­பட்ட அமைச்­சர் குபேர்­பாய் திண்­டோ­ரும் அப்­பெண்­க­ளு­டன் இணைந்து கோலாட்­டம் ஆடி மகிழ்ந்­தார்.