தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர்: ஒரு கோடி பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும்

2 mins read
8b6bb02e-2f59-43f8-8ae2-1604f445823d
சென்னை: குடும்­பத் தலை­வி­களின் உழைப்பை அங்­கீ­க­ரிக்­கவே மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­தார். படம்: பிக்ஸாபே -

'ஆண்டுக்கு ரூ.12,000 என்பது பெண்கள் சுயமரியாதையுடன் வாழ உதவும்'

சென்னை: குடும்­பத் தலை­வி­களின் உழைப்பை அங்­கீ­க­ரிக்­கவே மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

இத்­திட்­டத்­தால் பய­ன­டை­யும் பெண்­க­ளின் வங்கி கணக்­கிற்கே உரி­மைத்­தொகை செலுத்­தப்­படும் என்­றும் மொத்­தம் ஒரு கோடி குடும்­பத் தலை­வி­க­ளுக்கு உரிமைத்­தொகை வழங்­கப்­படும் என்­றும் நேற்று சட்­டப்­பே­ர­வை­யில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"மீனவப் பெண்­கள், சிறு கடை வைத்­தி­ருக்­கும் பெண்­கள், ஒரே நாளில் பல்­வேறு இல்லங்களில் பணி­பு­ரி­யும் பெண்கள், கட்­ட­டப் பணி­யா­ளர்­கள், குறைந்த ஊதி­யத்­துக்கு வேலை பார்க்­கும் பெண்­கள் எனப் பலர் பயனடைவர்," என்று முதல்­வர் ஸ்டா­லின் விளக்­கம் அளித்­தார்.

ஆண்­டுக்கு ரூ.12,000 என்­பது பெண்­கள் சுய­ம­ரி­யா­தை­யு­டன் வாழ உறு­து­ணை­யாக இருக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், தமிழ்­நாட்டை வள­மான வலி­மை­யான மாநி­ல­மாக உரு­வாக்க மக்­கள் நலன் சார்ந்த திட்­டங்­கள் அறி­விக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"சமூ­கத்­தில் வெற்றி பெறக்­கூ­டிய ஒவ்­வொரு ஆணுக்­குப் பின்­னா­லும் பெண் இருக்­கி­றார். தாய், மனைவி, சகோ­தரி என ஓர் ஆணுக்கு பின்­னால் பெண் இருக்­கி­றார்.

"மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டத்­திற்­காக ரூ.7,000 கோடி ஒதுக்­கப்­பட்­டதை தொடர்ந்து, யார் யாருக்­கெல்­லாம் கிடைக்­கும், கிடைக்­காது என எல்­லோரும் மனக்­க­ணக்கு போட்­டுக் கொண்டு வரு­கி­றார்­கள். இந்­தத் திட்­டத்­திற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­கள் விரை­வில் வெளி­யி­டப்­படும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்­ளது என்­றும் குழந்­தை­கள் கல்வி மேம்­படும் என்­றும் குறிப்­பிட்ட அவர், பெண்­க­ளின் தன்­னம்­பிக்கை உய­ரும் என்ற அடிப்­ப­டை­யி­லும் இத்­திட்­டம் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது என்­றார்.

"பெண்­கள்­தான் கிராம பொரு­ளா­தா­ரத்தை சுமக்­கி­றார்­கள் என்­பதை மறக்க முடி­யாது. பல்­வேறு வகை­களில் விலை­ம­திப்­பில்­லாத உழைப்பை வழங்­கும் பெண்­கள் இந்­தத் திட்­டத்­தால் பயன்­பெறு­வார்­கள்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.