சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி

திரு­வண்­ணா­மலை: சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்கித் தரு­வ­தா­கக் கூறி தங்­களை ஏமாற்­றி­ய­வர்மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் திரு­வண்­ணா­மலை­யில் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

கார் உதிரி பாகங்­கள் விற்­பனை செய்­யும் கடை வைத்­துள்ள அந்த ஆடவர், சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி பல­ரி­டம் ரூ.1.5 லட்­சம்வரை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

திருச்சி, திரு­வா­ரூர், மயி­லாடு­துறை, சென்னை, அரி­ய­லூர், தஞ்­சா­வூர், உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளைச் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் அவ­ரி­டம் பணம் கொடுத்­துள்­ள­னர்.

எனி­னும், சொன்­ன­படி அவர் வேலை வாங்­கித் தரா­த­து­டன் வசூ­லித்த பணத்­தை­யும் திருப்­பித் தர­வில்லை.

இத­னால், பணம் கொடுத்­த­வர்கள் திரு­வண்­ணா­ம­லை­யில் அந்த ஆட­வர் நடத்தி வரும் கடை முன்பு திரண்டு பணத்தை திருப்­பித்­தர வலி­யு­றுத்தி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது கடை­யில் இருந்த ஊழி­யர்­க­ளுக்­கும் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளுக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. இது குறித்து காவல்­து­றை­யி­லும் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. பணம் வசூ­லித்த ஆட­வ­ரிடம் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!