திருவண்ணாமலை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்களை ஏமாற்றியவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள அந்த ஆடவர், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.1.5 லட்சம்வரை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, சென்னை, அரியலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர்.
எனினும், சொன்னபடி அவர் வேலை வாங்கித் தராததுடன் வசூலித்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால், பணம் கொடுத்தவர்கள் திருவண்ணாமலையில் அந்த ஆடவர் நடத்தி வரும் கடை முன்பு திரண்டு பணத்தை திருப்பித்தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடையில் இருந்த ஊழியர்களுக்கும் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணம் வசூலித்த ஆடவரிடம் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.