சிவன் கோவிலுக்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் வழங்கிய சீர்

சிவன் கோவிலுக்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் வழங்கிய சீர்

1 mins read
63dbdc99-7664-4789-8223-94894a5caaa0
-

புதுக்­கோட்டை: மத நல்­லி­ணக்­கத்­துக்கு சிறந்த எடுத்­துக்­காட்டாக புதுக்­கோட்­டை­யில் அமைந்­துள்ள சிவன் கோவிலுக்கு இஸ்­லா­மி­யர்­களும் கிறிஸ்­து­வர்­களும் சீர் கொண்டுவந்­த­னர்.

ஆலங்­கு­டி­ பகுதியில் உள்ள அந்த கோவி­லில் நேற்று குடமுழுக்கு விழா நடை­பெற்­றது.

இதை­ய­டுத்து அப்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள தேவா­ல­யம், பள்­ளி­வா­சல்­களில் இருந்து கிறிஸ்து­வர்­களும் இஸ்­லா­மி­யர்­களும் தங்­க­ளு­டைய பாரம்­ப­ரிய முறைப்­படி சிவன் கோவி­லுக்கு சீர்வரிசை கொண்டு சென்­ற­னர்.

அவர்­கள் அனை­வ­ருக்­கும் சிவன் கோவில் நிர்­வா­கம் சார்­பில் மேள, தாளங்­கள் முழங்க சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

"மத நல்­லி­ணக்­கத்­திற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக இந்த நிகழ்வு அமைந்­துள்­ளது," என சமூக ஊட­கங்­களில் பல­ரும் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.