மதுரை: தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களையும் அவர்தம் படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
"தமிழக மீனவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
"மேலும், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, குழு காப்பீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"இலங்கை, இந்திய மீனவர்கள் குழுக்களின் சார்பில், மார்ச் முதல் வாரத்தில் நடந்த பேச்சுவார்த்தையால் கைதான தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர்," என்றார் அமைச்சர் முருகன்.
மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் மீனவர் குழுக்களின் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், மீனவர்களுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுகட்டும் வகையில் அரசு உதவும்," என்றார் அமைச்சர் முருகன்.

