தந்தையின் சடலம் முன் நின்று மானசீக ஆசி பெற்று தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்

தந்தையின் சடலம் முன் நின்று மானசீக ஆசி பெற்று தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்

1 mins read
dc4df4f7-24bc-4252-b7e5-6c70e25e5d64
-

திண்­டுக்­கல்: தந்­தை­யின் சட­லத்­தின்முன் நின்று மான­சீக­மாக ஆசி பெற்று 12ஆம் வகுப்­புப் பொதுத்­தேர்வுஎழு­திய மாண­வனைப் பல­ரும் பாராட்டி ஆறு­தல் கூறி­னர்.

கொடைக்­கா­னல் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ரிபாஸ் ஆண்­டனி. 12ஆம் வகுப்பு படித்து வரு­கி­றார்.

தற்­போது மாநி­லம் முழு­வ­தும் பொதுத்­தேர்­வு­கள் நடை­பெற்று வரு­கின்­றன. ரிபாஸ் ஆண்­ட­னி­யும் தேர்­வெ­ழுதி வரு­கி­றார்.

நேற்று முன்­தி­னம் காலை ரிபாஸ் தேர்வு எழுத பள்­ளிக்­குச் செல்ல தயா­ரான நிலை­யில், உடல்­ந­லக்குறை­வால் அவ­ரது தந்தை கால­மா­னது தெரி­ய­வந்­தது.

துடி­து­டித்­துப் போன ரிபாஸ், முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். பின்னர் பொதுத்தேர்வை எழுதி முடிப்பதுதான் தன் தந்தையின் விருப்பமாக இருக்கும் என்று அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து, விடுப்பு எடுக்காமல் தேர்வை எழுத அவர் தயாரானார். உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றினர்.

தந்­தை­யின் சட­லத்தை வீட்­டில் வைத்து, மான­சீக­மாக ஆசிபெற்­றார் ரிபாஸ். பின்னர் கனத்த இதயத்துடன் பள்ளிக்குச் சென்று தேர்வை எழுதி முடித்த அவர், பின்னர் வீடு திரும்பியதும் மகன் என்ற முறையில் தந்தைக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார்.

பொதுத்தேர்வு எழுதிவிட்டு தந்தையின் சடலத்தை ரியாஸ் சுமந்து சென்றதைப் பார்த்து அப்பகுதி மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.