தேர்வாணைய முறைகேடு: விளக்கம் கோரியது அரசு

தேர்வாணைய முறைகேடு: விளக்கம் கோரியது அரசு

2 mins read

ஒரே மையத்தில் 2,000 பேர் தேர்ச்சி: விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

சென்னை: தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் (டிஎன்­பி­எஸ்சி) நடத்­திய தேர்­வு­களில் முறை­கேடு நடந்­துள்­ள­தாக புகார்கள் எழுந்­துள்ளன. இதன் பேரில் ஏதே­னும் ஒரு குறிப்­பிட்ட மையத்­தில் தேர்­வு எ­ழு­தி­ய­வர்­களில் அதி­கமானோர் தேர்ச்சி பெற்­றுள்­ள­னரா என்ற விவ­ரங்­களை தாம் கோரி­யுள்­ள­தாக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

தேர்­வில் முறை­கேடு நடந்துள்­ள­தாக ஊட­கங்­களில் வந்த செய்­தி­யைப் பார்த்­த­தும், தமி­ழக அர­சின் மனி­த­வள மேம்­பாட்­டுத்­துறை செய­லா­ள­ருக்கு அச்­செய்­தியை அனுப்பி வைத்­த­தா­க­வும் தேர்­வா­ணைய அதி­காரி­க­ளி­டம் உரிய பதில்­க­ளைப் பெற்­றுத் தரு­மாறு அறி­வு­றுத்­தி­ய­தா­க­வும் அமைச்­சர் சட்­டப்­பே­ர­வை­யில் குறிப்­பிட்­டார்.

தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தால் அண்­மை­யில் 'குருப் நான்கு' போட்­டித் தேர்வுக்கான முடிவுகள் வெளி­யி­டப்­பட்டன. இந்நிலையில் இத்தேர்வு முடி­வு­களில் முறை­கேடு நடந்­துள்­ள­தாக எதிர்க்­கட்சி­கள் குற்­றம்­சாட்டி உள்­ளன.

ஒரே மையத்­தைச் சேர்ந்த இரண்­டா­யி­ரம் பேர் இத்­தேர்­வில் தேர்ச்சி பெற்­றி­ருப்­பது பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ள­தாக எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் ஆகி­யோர் தெரி­வித்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக சட்­டப்­பே­ர­வை­யில் கொண்டு வரப்­பட்ட கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தை­ அடுத்து, அமைச்சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் விளக்­கம் அளித்­துள்­ளார்.

"அர­சுத் தேர்­வா­ணை­யம் நடத்­தி­யுள்ள தேர்­வு­கள் குறித்து பொது­வெ­ளி­யில் வந்த தக­வ­லுக்­கும் என்­னி­டம் தேர்­வா­ணைய அதி­கா­ரி­கள் கொடுத்த விவ­ரங்­க­ளுக்­கும் சம்­பந்­தமே இல்லை.

"ஒரே மையத்­தில் இரண்­டா­யி­ரம் பேர் தேர்ச்சி பெற்­ற­தாக விளம்­ப­ரம் செய்த நபர், எத்­தனை மையங்­களை நடத்­து­கி­றார், எங்கு நடத்­து­கி­றார் என்­பது குறித்து உரிய தக­வல் என்­னி­டம் இல்லை," என்­றார் அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.

கடந்த காலங்­க­ளி­லும் இதே­போல் ஒரே தேர்வு மையத்­தில் இதே போன்ற தேர்வு முடி­வு­கள் வந்­துள்­ளனவா என்­பது குறித்து தேர்­வா­ணை­யத்­தி­டம் விளக்­கம் கேட்­டுள்­ள­தா­க­வும் அமைச்சர் தெரிவித்தார்.

இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பாக விளக்­கம் கேட்­பது என்­ப­தை­விட விரி­வான விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டு­வ­து­தான் பொருத்­த­மாக இருக்­கும் என முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

தேர்வு முடி­வு­களில் முறை­கே­டு­கள் நடை­பெற்­றி­ருக்­கி­றதா என்­பது குறித்து தமி­ழக முதல்­வர் விரி­வான விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்டு, அதற்­கேற்ப மேல் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­ம் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதே­போல் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் முறை­கேடு நடந்­துள்­ளதா என்­பதை அர­சாங்­கம் கண்­ட­றிய வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார்.

இதனால் தமிழக அரசு வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.