தாமதமாக வந்த அதிகாரிகள்; ஆட்சியர் நூதன தண்டனை

தாமதமாக வந்த அதிகாரிகள்; ஆட்சியர் நூதன தண்டனை

1 mins read

திருப்­பத்­தூர்: மக்­கள் குறை­தீர்வு கூட்­டத்­துக்கு கால­தா­ம­த­மாக வந்த அரசு அதி­கா­ரி­களை கூட்­டம் நடை­பெற்ற அரங்­குக்கு வெளியே தடுத்து நிறுத்­து­மாறு மாவட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டார். நேற்று முன்­தி­னம் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

அம்­மா­வட்­டத்­தில் வாரந்­தோ­றும் திங்­கட்­கி­ழமை குறை­தீர்வு கூட்­டம் நடை­பெ­று­கிறது. அந்த வகை­யில் நேற்று முன்­தி­ன­மும் அக்­கூட்­டம் நடை­பெற்­ற­போது, ஆட்­சி­யர் பாஸ்­கர பாண்­டி­யன் குறித்த நேரத்­துக்­குள் வந்து சேர்ந்­தார்.

எனி­னும், கூட்ட அரங்­கில் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான அரசு அதி­கா­ரி­கள் மட்­டுமே காணப்­பட்­ட­னர்.

இத­னால் அதிர்ச்சி அடைந்த ஆட்­சி­யர், எந்­தெந்த அதி­கா­ரி­கள் வர­வில்லை என விசா­ரித்­தார். பின்­னர் அவ­ரது உத்­த­ர­வின் பேரில் கூட்­டம் நடை­பெற்ற அரங்­கின் வாயில் கத­வு­கள் மூடப்­பட்­டன.

சில அதி­கா­ரி­களை மட்­டுமே கொண்டு மக்­கள் குறை­தீர்வு கூட்­டத்தை தொடங்­கிய ஆட்­சி­யர், தாம­த­மாக வந்த அதி­கா­ரி­களை அரங்­குக்­குள் அனு­மதிக்க வேண்­டாம் என பாது­கா­வ­லர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.

இத­னால் தாம­த­மாக வந்த அதி­கா­ரி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். அனை­வ­ரும் நுழைவு வாயில் அருகே காத்­துக்­கி­டந்­த­னர்.

கூட்­டம் முடி­வ­டைந்த பின்­னர், பொது­மக்­கள் நமக்கு முன்­பா­கவே இங்கு வந்து மணிக்­க­ணக்­கில் காத்­துக்­கி­டக்­கின்­ற­னர் என்­றும் அவர்­க­ளது உணர்­வுக்­கும் எதிர்­பார்ப்­புக்­கும் நாம் மதிப்­ப­ளிக்க வேண்­டும் என்­றும் தாம­த­மாக வந்த அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார் ஆட்­சி­யர்.