மாண்டவர் உயிரோடு வந்தார்; கவுண்டமணி, செந்தில் மகிழ்ச்சி

1 mins read
21694316-04dc-40e9-b55f-fc319ad312ed
-

உளுந்­தூர்­பேட்டை: உளுந்­தூர்­பேட்டை அருகே இருக்­கும் நெடு­மா­னூர் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த சுப்­பி­ர­மணி, 65, என்ற கூலித்­தொழி­லாளி, குடும்பப் பிரச்­சினை கார­ண­மாக கோபித்­துக்­கொண்டு எங்கோ சென்­று­விட்­டார்.

கவுண்­ட­மணி, 30, செந்­தில், 28, என்ற அவ­ரு­டைய இரண்டு மகன்­களும் மகளும் தந்­தையை பல இடங்­க­ளி­லும் பல நாள்­க­ளாக தேடி வந்­த­னர்.

இந்த நிலை­யில், கள்­ளக்­குறிச்சி மாவட்­டத்­தில் ஒரு காட்டுப் பகுதி யில் முதி­ய­வ­ரின் பிணம் ஒன்று அழு­கிய நிலை­யில் கிடந்­த­தைக் கண்ட ஆடு மேய்ப்­ப­வர்­கள் அது பற்றி அதி­கா­ரி­க­ளுக்­குத் தகவல் தெரி­வித்­த­னர்.

உயி­ரி­ழந்­த­வ­ரின் படத்தை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு அவரை அடை­யா­ளம் காண அதி­கா­ரி­கள் முயன்­ற­னர்.

சுப்­பி­ர­ம­ணி­யின் உருவ அமைப்பும் மாண்­ட­வ­ரின் உருவ அமைப்­பும் ஒரே மாதி­ரி­யாக இருந்­த­தால் மாண்­ட­வர் சுப்­பி­ர­மணி­தான் என புதல்­வர்­கள் முடிவு செய்தனர்.

உடலை தங்­கள் கிரா­மத்­திற்கு கொண்டுவந்து சுடு­காட்­டிற்­கு எடுத்துச்சென்­ற­போது, சுப்­பி­ர­மணி (படம்) கடைத்­தெ­ரு­வில் டீ குடித்­துக்கொண்டு இருப்­ப­தாக உறவினர் ஒரு­வர் கூறி­ய­தைக் கேட்டு வியப்புமிகுதியில் தந்தையைத் தேடி ஓடினர்.

தக­வல் அறிந்து வந்த அதி­கா­ரி­கள், பிணத்தை மீட்டு பிரேதப் பரி­சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.