68 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை

1 mins read

திருச்சி: திருச்சி மாந­க­ரத்­தி­லும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் 68 கி.மீ. தொலை­வுக்கு மூன்று வழித்­த­டங்­களில் மெட்ரோ ரயில் சேவை இயங்க சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மெட்ரோ சேவை தொடர்­பாக பேசிய மேயர் அன்­ப­ழ­கன், "சம­ய­பு­ரத்­தி­லி­ருந்து ஸ்ரீரங்­கம், தில்­லை­ந­கர் வழி­யாக வய­லூர் வரை 18.7 கி.மீ தொலை­வுக்கு ஒரு வழித்­த­டம், அது­வாக்­கு­டி­யி­லி­ருந்து திரு­வெ­றும்­பூர், மத்­தி­யப் பேருந்து நிலை­யம் வழி­யாக பஞ்­சப்­பூர் வரை 26 கி.மீ. தூரத்­துக்கு இரண்­டா­வது வழித் ­த­டம், திருச்சி சந்திப்பில் இருந்து பஞ்­சப்­பூர், விமான நிலை­யம், புதுக்­கோட்டை சாலை வழி­யாக ரிங்­ரோடு வரை 23.3 கி.மீ. தொலை­வுக்கு மூன்றாவது வழித்­ த­டத்திலும் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சாத்­தி­யக்­கூறு­கள் ஆரா­யப்­பட்­டுள்­ளது," எனத் தெரி­வித்­தார்.

சென்­னை­யைத் தொடர்ந்து மதுரை, கோவை, திருச்­சி­யி­லும் இந்த மெட்ரோ ரயில் இயக்­கப்­பட உள்ள நிலை­யில், சென்னை-கோவைக்கு இடையே 12வது வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்­டம் நேற்று (வியா­ழக்­கி­ழமை) தொடங்­கி­யது. ஏப்­ரல் 8ஆம் தேதி இதனைப் பிர­த­மர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.