மாடுகளுடன் சாலையில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள்

மாடுகளுடன் சாலையில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள்

1 mins read
379671cd-b795-423c-93fc-ced3fd301c37
-

உசி­லம்­பட்டி: கால்­ந­டை­க­ளுக்­கான புல், வைக்­கோல், புண்­ணாக்கு உள்­ளிட்ட தீவ­னம், மருத்­து­வம், பரா­ம­ரிப்­புச் செல­வு­கள் அதி­க­ரித்து வரு­வ­தால், மாநி­லம் முழு­வ­தும் பால் கொள்­மு­தல் செய் விலையை ஆவின் நிறு­வ­னம் உயர்த்­தித் தர­வேண்­டும் என பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இதே கோரிக்­கையை வலி யுறுத்தி மதுரை மாவட்­டத்­தி­லும் கடந்த இரு வாரங்­க­ளாக உசி­லம் பட்டி, மேலூர், திரு­மங்­க­லம் உள்­ளிட்ட பகு­தி­களில் பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் சாலை­யில் பாலைக் கொட்டி போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அதன்­படி நேற்று காலை உசி­லம்­பட்டி அருகே உள்ள கரு­மாத்­தூர் சாலை­யில் பெண்­கள் உட்­பட 50க்கும் மேற்­பட்ட பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கறவை மாடு­க­ளு­டன் வந்து சாலை­யில் பாலைக் கொட்டி திடீ­ரென மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். அப்­போது, தமி­ழக அரசு பால் கொள்­மு­தல் விலையை ரூ. 7 முதல் ரூ.10 வரை உயர்த்தி தர­வேண்­டும் என வலி­யு­றுத்தி முழக்­க­மிட்­ட­னர். இது­கு­றித்து பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கூறு­கை­யில், "தீவ­னம், பரா­ம­ரிப்­புச் செல­வு­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் கால்­நடை­களை வளர்ப்­போர் கடும் சிர­மத்­துக்கு ஆளா­கின்­ற­னர். எனவே ஆவின் நிறு­வ­னம் பால் கொள்­மு­தல் விலையை உயர்த்­தித் தர­வேண்­டும். அரசு உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்வு காண­வேண்­டும்," என்­ற­னர்.

கருமாத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலை சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். படம்: தமிழக ஊடகம்