ராகுல்காந்தி பதவிப் பறிப்புக்கு எதிராக ஒரு மாதப் போராட்டம்

ராகுல்காந்தி பதவிப் பறிப்புக்கு எதிராக ஒரு மாதப் போராட்டம்

2 mins read

சென்னை: ராகுல்­காந்­தி­யின் எம்.பி. பத­விப் பறிப்­புக்கு எதி­ராக தமி­ழ­கத்­தில் ஏப்­ரல் மாதம் முழு­வ­தும் தொடர்­போ­ராட்­டங்­கள் நடத்­தப்­படும் என்று தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக சென்னை சத்­தி­ய­மூர்த்­தி­ப­வ­னில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறு­கை­யில், "ராகுல்­காந்தி பதவி பறிப்பு, அதானி விவ­கா­ரம் குறித்து நாடு முழு­வ­தும் ஒரு மாத­கால தொடர் போராட்டங்­களை நடத்த உள்­ள­தாக அகில இந்­திய காங்­கி­ரஸ் அறி­வித்­துள்­ளது.

"அதன்­படி பாஜக ஆட்­சியை எதிர்த்து 'பாஜ­க­வின் ஜன­நா­ய­கப் படு­கொலை' என்ற தலைப்­பில் பிரசாரக் கையேடு இன்று மார்ச் 31ஆம் தேதி வெளி­யி­டப்­படும்.

"ஏப்­ரல் 3ஆம் தேதி, சென்னையில் அம்­பேத்­கர் அல்­லது காந்தி சிலை­முன்பு காங்­கி­ரஸ் சார்­பில் கண்­ட­னப் போராட்­டம் நடைபெறும். அத்துடன், இளை­ஞர், மாண­வர் காங்­கி­ரஸ், இதர துறை­கள் சார்­பில் பிர­த­மர் மோடிக்கு அஞ்­சல் அட்­டை­கள் மூலம் கேள்விகள் எழுதி அனுப்­பும் போராட்­டம் நடை­பெ­றும்.

"மக­ளிர் காங்­கி­ரஸ் சார்­பில் டெல்­லி­யில் நடை­பெ­றும் போராட்­டத்­தில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து பெருந்­தி­ர­ளான மக­ளிர் காங்­கிர சார் பங்­கேற்க உள்ளனர்.

"தமி­ழ­கத்­தில் ஆருத்ரா நிதி நிறு­வன ஊழ­லுக்கு பின்­னால் தமி­ழக பாஜக உள்­ளது. அது தொடர்­பான விசா­ர­ணையை தமி­ழக அரசு துரி­தப்­ப­டுத்த வேண்­டும். பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­ம­லையை விசா­ரிக்கவேண்­டும்," என்று கூறி­னார்.

இத­னி­டையே, சென்னை சைதாப்­பேட்­டை­யில் தீப்­பந்­தம் ஏந்தி போராட்­டத்­தில் ஈடு­பட முயன்­ற­ காங்கிரஸ் ­கட்­சி­யி­னரை சாதா­ரண உடை­யில் இருந்த காவ­லர்­கள் தாக்­கி­ய­தால் தள்ளு­முள்ளு ஏற்­பட்­டது. இதில் ஒரு­வர் மயக்­க­ம­டைந்­தார்.

இதனைக் கண்­டித்­து காங்­கிரஸ் கட்­சி­யி­னர் மூன்று மணி நேர­மாக போராட்டத்தில் நேற்று ஈடு­பட்­ட­னர்.

திண்டுக்கல், உடுமலைப் பேட்டையில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.