புதுடெல்லி: பட்டினி காரணமாக இந்தியாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ாளர்.
இந்தியாவில் பட்டினி உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் மத்திய அரசிடம் உள்ளதா என கஜானன் சந்திரகாந்த் எம்பி எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள உணவுத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், "இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் பட்டினிச் சாவு ஏற்பட்டதாக மாநிலம், யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் ஏழை எளிய மக்கள் பட்டினியால் உயிரிழந்துவிடக் கூடாது என்பதற்காக 'கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு, நாட்டில் உள்ள மக்களுக்கு இலவசமாக உணவுத் தானியங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

