தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை என முதல்வர் எச்சரிக்கை

2 mins read
f8525a18-7283-48f2-a163-e0e4c83a7836
-

சென்னை: கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யில் பாலி­யல் துன்­பு­றுத்­தல் இருப்­ப­தாக எழுந்­துள்ள புகார்­களை அடுத்து, அங்கு பயி­லும் மாண­வி­க­ளின் பாது­காப்­புக்­குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக சட்­டப்­பே­ர­வை­யில் கொண்டு வரப்­பட்ட கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தின் மீது பேசிய அவர், குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால், தவறு செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

தேசிய மக­ளிர் ஆணை­யம் தமி­ழ­கக் காவல்­து­றைக்கு கடி­தம் எழு­தி­யி­ருந்­தது. அதில், அந்த ஆணை­யமே இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரித்து முடித்­து­விட்­ட­தா­கக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

"இந்த விவ­கா­ரம் தொடர்­பாக காவல்­து­றைக்கு எழுத்­து­பூர்வ புகார் எது­வும் வர­வில்லை. எனி­னும் எனது கவ­னத்­திற்கு வந்­த­வு­டன், மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் தொடர்­பு­கொண்டு விவ­ரங்­க­ளைக் கேட்டு அறிந்­தேன்.

"மேலும் விவ­ரங்­களை அறிய வரு­வாய் கோட்ட அலு­வ­லர், வட்­டாட்­சி­யர், காவல் இணை ஆணை­யர், துணை ஆணை­யர், அலு­வலர்­கள் அங்கு அனுப்பி வைக்­கப்­பட்டு விசா­ரணை நடை­பெற்­றது. மேலும் மாண­வி­கள், கல்­லூரி நிர்­வா­கத்­தி­டம் அதி­கா­ரி­கள் தொடர்ந்து பேசி வரு­கி­றார்­கள்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

சென்­னை­யில் இயங்கி வரும் கலா­ஷேத்ரா கல்­லூ­ரி­யில் பணி­யில் உள்ள நான்கு பேரா­சி­ரி­யர்­கள் மாண­வி­க­ளுக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்­தப் பேரா­சி­ரி­யர்கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி மாண­வி­கள் உள்­ளி­ருப்புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். மாண­வி­களுக்கு காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள் உள்­ளிட்ட அர­சி­யல் கட்­சி­கள் மட்­டு­மல்­லா­மல் பல்­வேறு அமைப்­பு­களும் ஆத­ரவு அளித்­துள்­ளன. மேலும், கல்­லூரி நில­வ­ரம் குறித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்கு மாண­வி­கள் கடி­தம் ஒன்­றும் எழு­தி­யுள்­ள­னர்.

"கடந்த 15 ஆண்­டு­க­ளாக பாலி­யல் தொல்லை எனும் கொடிய சம்­ப­வங்­கள் அரங்­கேறி வரு­கின்­றன. ஆனால் போராட்­டம் என்று கையில் எடுத்­தால், உடனடி­யாக விடு­முறை விட்டு, மாணவ, மாண­வி­யரை திசை திருப்­பி­வி­டு­கி­றார்­கள். பாலி­யல் தொந்­த­ரவு அளிக்­கும் 4 பேரா­சி­ரி­யர்­கள் மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என மாணவிகள் தரப்­பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.