தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரந்தூர் மக்களின் பள்ளிப் புறக்கணிப்புப் போராட்டம்

1 mins read

சென்னை: பரந்­தூர் பகு­தி­யில் புதிய விமான நிலை­யம் அமைப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து, குழந்­தை­க­ளைப் பள்­ளிக்கு அனுப்­பா­மல் அப்­ப­குதி மக்­கள் போராட்­டத்தை தீவி­ரப்­ப­டுத்தி உள்­ள­னர்.

விமான நிலை­யத்­துக்­காக பல ஏக்­கர் நிலங்­கள் கையப்­ப­டுத்­தப்­படு­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து பரந்­தூர் பகுதி பொது­மக்­கள், குறிப்­பாக விவ­சா­யி­கள் போராடி வரு­கின்­ற­னர்.

250 நாள்­க­ளாக சாலை மறி­யல், உண்­ணா­வி­ர­தம் எனப் பல்­வேறு வித­மான போராட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், குழந்­தை­க­ளைப் பள்­ளிக்கு அனுப்ப மாட்­டோம் என அறி­வித்து புதிய போராட்­டத்­தைத் தொடங்கி உள்­ள­னர். நேற்று பரந்­தூர் கிராம நிர்­வாக அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் தங்­கள் கையில் கறுப்­புக் கொடி­களை ஏந்­தி­யி­ருந்­த­னர். ஏக­னா­பு­ரம் ஊர் மக்­கள் காத்­தி­ருப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

"குடி­யி­ருப்­பு­க­ளை­யும் நிலப்­பகு­தி­க­ளை­யும் கைய­கப்­ப­டுத்­து­வதை அரசு கைவிட வேண்­டும். இந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி அனைத்து சிற்­றூர் மக்­களும் இணைந்து இரவு நேர அற­வ­ழிப் போராட்­டம் நடத்தி வரு­கி­றோம். "சுதந்­திர தினம், மே தினம், உள்­ளாட்சி தினம், காந்தி ஜெயந்தி ஆகி­ய­வற்­றை­யொட்டி நடை­பெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்­டங்­களில் விமான நிலை­யம் வரு­வதை எதிர்த்து தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

"இந்­நி­லை­யில், நிலங்­கள் கைய­கப்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கை­கள் நீடிக்­கும் என அமைச்­சர் சாத்­தூர் ராம­ச்சந்­தி­ரன் சட்­டப்­பே­ர­வை­யில் கூறி­யது கண்­டிக்­கத்­தக்­கது," என்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­கள் தெரிவித்தனர்.