செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஐபிஎல்: தமிழகத்தின் மின் தேவை 200 மெகாவாட் அதிகரிக்கும்

சென்னை: ஐபில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளை யில் தமிழகத்தில் மின் தேவை மேலும் 200 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தற்போது தமிழகத்தின் மொத்த மின் தேவை என்பது 17 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் ஆட்டங்களைக் கண்டு ரசிக்கின்ற னர். எனவே அனைத்து போட்டிகளையும் மின்தடையின்றி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா சொத்துகளில் பங்கு கேட்கும் 83 வயது முதியவர்

சென்னை: பெங்களூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன் என்ற 83 வயது முதியவர், தாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்றும் அவரது சொத்தில் தமக்கும் பங்கு தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஜெயலலிதா வின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகிய இருவரும்தான் சட்டப்படியான வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் என்ற முறையில் அவரது சொத்துகளுக்கு தாமே நேரடி வாரிசு என்று அறிவிக்கக் கோரியுள்ளார் வாசுதேவன்.

கோடையில் ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி: தமி­ழ­கத்­தில் கோடை வெயில் சுட்­டெ­ரிக்­கத் தொடங்கி உள்­ளது. இதை­ய­டுத்து ஊட்டி, கொடைக்­கானல் உள்­ளிட்ட குளிர்ப் பகு­தி­களில் சுற்­று­லாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. ஊட்­டி­யில் திரைப்­பட படப்­பி­டிப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தாவ­ர­வி­யல் பூங்கா, ரோஜா பூங்கா உள்­ளிட்ட முக்­கிய சுற்­று­லாத் தலங்­களில் பொதுமக்­க­ளின் வசதி கருதி இந்­தத் தடை விதிக்­கப்­பட்டுள்­ள­தாக தோட்­டக் கலைத்­துறை தெரி­வித்­துள்­ளது.கொடைக்­கா­ன­லில் குணா குகை, தூண் பாறை உள்­ளிட்ட இடங்­களில் வெளி­மா­நில சுற்­று­லாப் பய­ணி­கள் அதிக அள­வில் காணப்­ப­டு­கின்­ற­னர் என்­றும் ஏரி­யில் படகு சவாரி செய்­தும் ஏரிச் சாலை­யில் குதிரை சவாரி மேற்­கொண்­டும் மகிழ்­கின்­ற­னர் என்­றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. தற்­போது கொடைக்­கா­ன­லில் பகல் நேரத்­தில் 14 டிகிரி, இர­வில் 10 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வாகி வரு­கிறது.

உடல்நலக்குறைவு: யானைக்குட்டி பலி

தர்மபுரி: ஆஸ்கர் ஆவணப்படப் புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியிடம் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்ட 4 மாத குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் தர்மபுரியில் தாயைப் பிரிந்த குட்டி யானை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.