தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் நிலைய பெயர்ப்பலகை: இந்தி எழுத்துகள் அழிப்பு

1 mins read
65fdc110-ff49-4e1c-9718-ef30c3d0fe9e
-

சென்னை: கோட்டை ரயில் நிலை­யத்­தின் பெயர்ப் பல­கை­யில் இந்தி எழுத்துகள் அழிக்­கப்­பட்­டது குறித்து சென்­னை­யில் உள்ள ரயில்வே பாது­காப்­புப் படை­யி­னர் விசா­ரணை மேற் கொண்­டுள்­ள­னர்.

இந்­தித் திணிப்பு கூடாது என பல்­வேறு மாநி­லங்­கள் மத்­திய அர­சுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தின் ஆவின் நிறு­வ­ன­மும் கர்­நா­ட­கா­வின் நந்­தினி நிறு­வ­ன­மும் உற்­பத்தி செய்­யும் தயிர் பொட்­ட­லங்­களில் 'தஹி' என்ற இந்தி வார்த்­தையை அச்­சிட வேண்­டும் என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

'தஹி' என்­றால் தமி­ழில் தயிர் என்று அர்த்­தம். அந்­தந்த மாநில மொழி வார்த்­தை­க­ளை­யும் அடைப்­புக் குறிக்­குள் பயன்­படுத்­த­லாம் என்று மத்­திய அர­சின் உண­வுப் பாது­காப்­புத் தரக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் மாநில அர­சு­க­ளுக்கு அண்­மை­யில் கடி­தம் எழு­தி­யி­ருந்­தது.

இதற்கு தென் மாநி­லங்­களில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. மொழி ஆர்­வ­லர்­கள் வெளிப்­படுத்­திய எதிர்ப்­பின் கார­ண­மாக இந்த உத்­த­ரவு திரும்­பப் பெறப்­பட்­டது.

இத­னி­டையே, புதிய விவ­கா­ரம் கிளம்­பி­யுள்­ளது. சென்னை கோட்டை புற­ந­கர் ரயில் நிலை­யத்­தின் பெயர்ப் பல­கை­யில் தமிழ், இந்தி, ஆங்­கி­லத்­தில் அறி­விப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லை­யில், அந்தப் பல­கை­யில் உள்ள இந்தி வார்த்தை மட்­டும் அடை­யா­ளம் தெரி­யாத சில­ரால் கறுப்பு மை பூசி மறைக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து விசா­ரணை தொடங்கி உள்­ளது. ரயில் நிலைய கண்­கா­ணிப்­புக் கரு­வி­களில் பதி­வான காட்­சி­களை வைத்து ரயில்வே பாது­காப்­புப் படை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.